Thursday, November 16, 2023
மணல் – வலிகளைப் புதைக்கும் நிலம்
'வெய்யில் மணிதர்கள்' நூல் அறிமுகம்
අම්බලම සහ සමාජය : ශ්රී ලංකාවේ පුරාණ අම්බලම් පිළිබඳ ඓතිහාසික පර්යේෂණයක් “அம்பலமும் சமூகமும்''
நினைவு தெரிந்த நாளில் இருந்து அம்பலம் பற்றிய நினைவுகள் எனக்குள் இருக்கின்றன. நான் கடக்கும் தெருக்களில் இரண்டு அம்பலங்கள் அமைந்திருப்பதே அதற்குக் காரணம். பெரும்பாலான நேரங்களில் அங்கே யாராவது அமர்ந்து கொண்டும் கதைத்துக் கொண்டும் இருப்பார்கள்.
‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’விறுவிறுப்பான ஒரு நாவலை ஒத்த நூல்.
“தமிழின் முதல் நிகழ்ச்சி அளிக்கையாளர் பி.எச். அப்துல் ஹமீத். மற்றெந்த வானொலிக் கலைஞரையும் விட முதலாவதாகவும், மிகச் சிறப்பாகவும் இதைச் செய்திருப்பவர் பி.எச் அப்துல் ஹமீத். உண்மையில் அப்துல் ஹமீத் தோற்றுவித்த நியமங்கள்தான் நிகழ்ச்சி அளிக்கைகளுக்கு மிக முக்கியமாக அமைகின்றன.“
“சமாதானத்தின் குரல்கள்“ – கடந்த காலத்தின் சாட்சியங்கள்
தோந்நிய யாத்திரா – பண்பாட்டின் வேர்களைத் தேடிய பயணங்கள்
Wednesday, October 11, 2023
இந்த ஆவணப்படத்தை இயக்குவதில் எனக்கிருந்த மிகப் பெரிய வரையறை இத்தகைய ஒரு பரந்த விடயப்பரப்பின் மூலாதாரங்களை எப்படிச் சேகரிப்பது, எங்கிருந்து தொடங்குவது,யாரிடம் கதைப்பது என்பதுதான்- நாத்யா பிமானி பெரேரா
இலங்கை முஸ்லிம்களின்
ஒலிக்கலைகள் மற்றும் பாடல் மரபுகளை ஆராயும் “மினாரத்“ ஆவணப்பட இயக்குனருடனான நேர்காணல்
Tuesday, March 21, 2023
தட்டு தெகே இஸ்கோலே – சுவர்களுக்கு வெளியில் ஒரு வகுப்பறை
//இரவும்
பகலும் என் நாடி நரம்புகளில்
ஓடும் அதே வாழ்க்கையருவிதான் உலகமெலாம்
ஓடி தாள லயங்களுடன் களி
நடனம் புரிகிறது. பூமியின் துணிக்கைகள் வழியாக எண்ணற்ற புல்வெளியில் ஆனந்தமாய் அரும்பி.. ஆரவாரமாக அலைபாயும் இலைகளாயும் பூக்களாயும் சட்டென்று வடிவம் கொள்வதும் அதே வாழ்க்கைதான்.// ரவீந்திரநாத்
தாகூர்(மொழிபெயர்ப்பு- பீ.எம்.எம்
இர்பான்)
தட்டு தெகே இஸ்கோலே තට්ටු දෙකේ ඉස්කෝලේ (இரண்டு மாடிப் பாடசாலை) சர்வதேசத்தின் கவனத்தை வென்ற மற்றொரு சிங்களத் திரைப்படம். பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்குமான திரை விருந்தாக இருக்கிறது இத் திரைப்படம்.
Tuesday, March 7, 2023
Bulletproof Children- நம் சமகாலத்தில் குறுக்கிடும் இருண்ட தேவதைக் கதை
காலத்துக்கு காலம் மாறுபடுகின்ற மனித அனுபவங்களை கலைப்படைப்புகளில் கொண்டு வருகின்ற போது கலைப் படைப்பின் மொழியிலும் மாற்றங்கள் தேவைப்படுகின்றது. ஒரு கதையை எப்போதும் ஒரே முறையில் சொல்வதைவிட வேறுபட்ட முறைகளில் அந்த கதையை முன் வைக்கின்ற போது அது தருகின்ற அனுபவம் முற்றிலும் வித்தியாசப்படுகிறது. சிங்கள சினிமாத்துறை புதிய இயக்குநர்களின் முயற்சியால் பல பரிசோதனை முயற்சிகளைக் கடந்து கொண்டிருக்கிறது.
Thursday, February 23, 2023
Gaadi(காடி) : ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான குரல்
Gaadi (காடி) திரைப்படம் முடிந்ததும் வேறு உலகம் ஒன்றில் நான் சஞ்சரித்துக் கொண்டிருந்தேன். என்னைச் சுற்றியுள்ள எல்லா சப்தங்களுக்கும் நடுவே உறைந்த மனநிலையோடு நான் பயணித்துக் கொண்டுருந்தேன்.ஒரு நல்ல கலைப்படைப்பு நிச்சயம் நம்மை பாதிக்கச் செய்கிறது.