Wednesday, March 27, 2013

பிரார்த்தனை ஆயுதம்


பனி கொட்டும் அதிகாலையில் நிலவின் கலங்கம் தெரியும் வானைப் பார்த்து தன் இரு கரங்களையும் ஏந்திப் புரியும் ஒருவனின் பிரார்த்தனை வீண் போக வாய்ப்பில்லை. எல்லா மனிதரும் தம் நெருக்கடி மிகுந்த பொழுதொன்றில் யாரோ ஒருவனிடம் பிரார்ததனை புரியவே செய்கின்றனர்.கடவுள் நம்பிக்கையற்ற ஒரு நாஸ்திகனும் தன் நெருக்கடியை தீர்த்துக் கொள்ள வானத்தைப் பார்த்துக் கொள்கிறான்.

ஓவ்வொரு நாளும் கோடிப் பேரினுடைய குரல்கள் வானத்தின் பக்கம் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.வானவர்களும் அல்லாஹ்வும் அதனை செவிமடுக்கிறார்கள்.காற்றின் திசைகளிலும் வானவெளியிலும் அவை அலைந்து கொண்டு அங்கீகரிப்பிற்காக காத்து நிற்கின்றன.

Tuesday, March 19, 2013

Life of Pi -போராட்டத்தின் குறியீடு


Life of Pi (லைப்ஃ ஒப் பை)என்ற புதின நாவலின் தமிழ் மொழிபெயர்ப்புப் புத்தகத்தை அண்மையில் புத்தகசாலை ஒன்றில் பார்த்தேன். இந் நூல் 2001ஆம் ஆண்டில் யான் மார்த்தேல் (Yann Martel) என்பவரால் எழுதப்பட்டது.விலை ஆயிரத்தையும் தாண்டி இருந்தது.புத்தகத்தை வாங்க வேண்டும் என்ற ஆவலை அதே பெயரில் தயாரிக்கப்பட்டிருக்கும் படத்தைப் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.இந்திய விலையின் நான்கு மடங்கு செலுத்தித்தான் இலங்கையில் புத்தகம் வாங்க வேண்டும்.இலங்கையின் அதிகரித்த வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில் அவ்வளவு பணம் கொடுத்து புத்தகம் வாங்குவது என்னைப் போன்றவர்களுக்கு கஷ்டமானதுதான்.ஒவ்வொரு புத்தகம் வாங்கி வரும் போதும் உம்மாவின் ஏச்சுடன்தான் அதனை புத்தக ராக்கையில் வைக்க வேண்டும்.இதனை இவ்வளவில் நிறுத்திக் கொண்டு விடயத்திற்கு வருவோம்.

Tuesday, March 5, 2013

டோனி ஹஸன்-இசைப் பயணத்தின் 50 ஆண்டுகள்



டோனி ஹஸன் அவர்களை எதேர்ச்சையாக ஒரு நாள் மாலையில் பள்ளி வாயலில் சந்தித்தேன்.பின்னர் அவரைச் சந்திக்க ஒரு மழையுடன் கூடிய நாளில் அவரது வீட்டிற்குச் சென்றேன்.அன்று அவருடைய 63 ஆவது பிறந்த நாளாக இருந்தது.இசை உலகில் அவருடைய 50 ஆவது வயதை அன்று அவர் நிறைவு செய்திருந்தார்.வீட்டில் எல்லோரும் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.அன்று சுகயீனமாக இருந்தாலும் நான் ஒலிப்பதிவுக் கருவியை தயார் செய்யவே தன்னை சுதாகரித்துக் கொண்டு அமர்ந்தார்.வழமை போல நான் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினேன்.

எப்போது இசைத்துறைக்கு வந்தீர்கள்.


நான் பத்தரமுல்லஇதலங்கமையை பிறப்பிடமாகக் கொண்டவன்..1962 இல் நான் சங்கீத மேடைக்கு வந்தேன்.அப்போது கொம்பனித் தெருவிலே ஒரு சங்கீதக் கச்சேரி நடைபெற்றது.பெரிய கலைஞர்கள் அதில் பங்கெடுத்தார்கள். அங்குதான் எனது இசைப் பயணத்தின் முதல் எட்டு ஆரம்பமானது.அப்போது சிங்களப் பாடல்கள்தான் அதிகமாகப் பாடினேன்.எனது 16 ஆவது வயதிலே என்னுடைய வித்துவான் ஆர்.முத்துசாமி(மோகன் ராஜின் அப்பா) 'ஒபநெதிநம்' எனும் படத்தில் மூத்த கலைஞர் ஜே.எ மில்டன் பெரேராவுடன் இணைந்து ஒருபாடலைப் பாட ஒரு சந்தர்ப்பம் கொடுத்தார்.அது நினைத்துப் பார்த்திராத ஒன்றாக இருந்தது.67 இல் ஒடிஷனில் தேறி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தா பணத்திற்கு வந்தேன்.70 களில் உயர் தரக் கலைஞராக வந்தேன்.அதிகமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது.பின்னர் தொடர்ச்சியாக சிங்களம்இதமிழ்இஹிந்தி பாடல்களில் 50 ஆண்டுகளாக இயங்கினேன்.