விசாகேசவ சந்திரசேகரம் எழுதி, இயக்கிய மணல் திரைப்படம் போருக்குப் பிந்திய சூழமைவைப் பேசும் இலங்கையின் முழுநீளத் திரைப்படம். இலங்கைக் கலைஞர்களின் பங்குபற்றுதலோடு வெளியான இத் திரைப்படம் சர்வதேச அளவில் சிறந்த திரைப்படத்திற்கான நான்கு விருதுகளை வென்றுள்ளது. எழுத்தாளர்,சமூக செயற்பாட்டாளர்,மனிதஉரிமை சட்டத்தரணி எனப் பல பரிமானங்கள் கொண்ட விசாகேசவ இதற்கு முன் பாங்ஷு எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
Thursday, November 16, 2023
'வெய்யில் மணிதர்கள்' நூல் அறிமுகம்
வாசிப்பின் தாகம் தெரிய வந்த நாட்களில் மெல்ல மெல்ல அந்தப் பெயர் மனதில் ஓரிடத்தைப் பிடித்துக் கொண்டது. பின் நாட்களில் அவருடைய 'காணாமல் போனவர்கள்' கவிதைத் தொகுப்பை முதன் முதலாக வாசித்தது ஞாபகம். அது போல என்னைத் தீயில் எறிந்தவள். அவர் பிரதம ஆசிரியராக இருந்து வெளிவந்த 'யாத்ரா' கவிதைகளுக்கான இதழ் நல்ல கவிதைகளையும் கவிஞர்களையும் அடையாளப்படுத்தியது.நின்று போயிருக்கக் கூடாது என்று நான் நினைக்கும் இதழ்களில் அதுவும் ஒன்று.
අම්බලම සහ සමාජය : ශ්රී ලංකාවේ පුරාණ අම්බලම් පිළිබඳ ඓතිහාසික පර්යේෂණයක් “அம்பலமும் சமூகமும்''
நினைவு தெரிந்த நாளில் இருந்து அம்பலம் பற்றிய நினைவுகள் எனக்குள் இருக்கின்றன. நான் கடக்கும் தெருக்களில் இரண்டு அம்பலங்கள் அமைந்திருப்பதே அதற்குக் காரணம். பெரும்பாலான நேரங்களில் அங்கே யாராவது அமர்ந்து கொண்டும் கதைத்துக் கொண்டும் இருப்பார்கள்.
நண்பர் கலாநிதி. ரோஹித தஸநாயக்க அவர்கள் அம்பலம் பற்றிய நூலைத் தந்தபோது கிராமத்தின் அம்பலங்கள் பற்றிய நினைவே எனக்குள் மேலெழுந்தது.
‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’விறுவிறுப்பான ஒரு நாவலை ஒத்த நூல்.
“தமிழின் முதல் நிகழ்ச்சி அளிக்கையாளர் பி.எச். அப்துல் ஹமீத். மற்றெந்த வானொலிக் கலைஞரையும் விட முதலாவதாகவும், மிகச் சிறப்பாகவும் இதைச் செய்திருப்பவர் பி.எச் அப்துல் ஹமீத். உண்மையில் அப்துல் ஹமீத் தோற்றுவித்த நியமங்கள்தான் நிகழ்ச்சி அளிக்கைகளுக்கு மிக முக்கியமாக அமைகின்றன.“
பேராசிரியர்.கா. சிவத்தம்பி
“சமாதானத்தின் குரல்கள்“ – கடந்த காலத்தின் சாட்சியங்கள்
“எங்களுடன் கதையுங்கள் எங்களைப் பற்றிக் கதைக்காதீர்கள்.“ அயா செப்பி
இலங்கையின் முப்பது வருட உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின் போர் குறித்த பல்வேறு நூல்கள் யுத்தத்தின் கொடூரங்களைப் பேசும் நாவல்களாக, சிறுகதைகளாக, கவிதைகளாக, ஆய்வுகளாக பல வடிவங்களில் வெளிவந்தன. இனியும் இப்படி ஒரு யுத்தம் வேண்டாம் என்று பரைசாற்றி கற்றுக் கொண்ட பாடங்களை மையப்படுத்தி அவற்றின் பேசு பொருள் அமைந்திருந்தன.
தோந்நிய யாத்திரா – பண்பாட்டின் வேர்களைத் தேடிய பயணங்கள்
சாளை பஷீரின் தோந்நிய யாத்திரா (தோன்றிய பொழுதின் பயணங்கள்), பயணங்களின் வழியே நிலங்களை, பண்பாடுகளை, மனிதர்களை, இயற்கையை,வரலாற்றைப் பேசுகின்ற அவரது சமீபத்திய நூல்.
பன்னிரன்டணா சுல்தான், கசாக்கின் இதிகாசம், நாகூர், பொன்னானி, கொண்டோட்டி, மம்புரம் தங்ஙள், திருவனந்தபுரம் ஆகிய ஏழு கட்டுரைகள் உள்ளடங்களாக தேர்வு செய்யப்படாத பாதை எனும் மொழிபெயர்ப்புக் கவிதையுடன் சீர்மை வெளியீடாக கடந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டது இந் நூல். அவரது எழுத்துக்கள் நூலுறுப் பெறுவதில் எனக்கும் மட்டற்ற மகிழ்ச்சிதான். ஒரு எழுத்தாளனுக்கு உலகிலுள்ள எல்லா வஸ்த்துக்களையும் விட அவனது நூல்தான் உயர்ந்த சொத்து.
Subscribe to:
Posts (Atom)