Thursday, July 18, 2019

மகாத்மா காந்தி: இலங்கை விஜயமும் இலங்கை அரசியலும்

பிரபல சிங்கள எழுத்தாளர் சம்பத் பண்டார அவர்களது 'மகாத்மா காந்தி: இலங்கை விஜயமும் இலங்கை அரசியலும்' என்ற நூல் காந்தியின் இலங்கை விஜயம் குறித்த பல்வேறு தரவுகளை முன்வைக்கின்றது.

காந்தியின் இலங்கை விஜயம் குறித்து இணையத்தில் வித்தியாசமான கருத்துக்கள் இருக்கின்றன.அதாவது சீ. கொரியா என்பரே காந்தியை இலங்கைக்கு அழைத்ததாகவும் அவர் மூன்று வாரங்கள் இலங்கையில் இருந்ததாகவும் சிலாபத்தில் தங்கியதாகவும் தகவல்கள் இணையத்தில் இருக்கின்றன.