Thursday, August 22, 2013

அதிகாரம் இரத்தத்தை விடவும் சுவையானது...



பிணங்களை ஒதுக்கி
முடியாத வேளையில்
மிதித்தே முன்னேறினேன்
மனிதம் நசுங்கித் தொலைந்தது.

உலகம் கொலைக் களமாக மாறும் ஒவ்வொரு கணமும் இக்கவிதை எனக்குள் தோன்றி என்னை உணர்விழக்கச் செய்துவிடுகிறது. இலங்கையில் யுத்தம் முடிந்த போது முதன்முதலாக A9 வழியே பயணித்த போது காற்றெல்லாம் அழுகையின் குரல்களும் ஒப்பாரிகளும் என் செவிகளுக்குள் கேட்பது போலத் தோன்றியது.

Tuesday, August 13, 2013

Kai Po Che-தோழமையின் நிழல்.



சின்ன வயதில் கிரிகெட் விளையாட்டில் ஒரு பித்து நிலைதான் இருந்தது.வீட்டின் சிறிய முற்றம்>வீதி>வயல் வெளிகள் என விளையாடாத இடமே இல்லை.அப்போது பெட்டும் பந்தும் அபூர்வப் பொருள்களாகவே கண்களுக்குத் தெரிந்தன.சொல்லிச் சிரிப்பதற்கும் சந்தோசப்படுவதற்கும் ஏராளமான சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

Wednesday, August 7, 2013

அன்பு அனைத்தையும் மிகைக்கும்…



                      
சிரியாவின் மனிதப்படுகொலைகளை இன்னும் நிறுத்தியபாடில்லை அசாதின் அரசாங்கம்.அன்றாடம் இறந்து மடியும் ஆயிரம் உயிர்களின் வலியையும் அந்த தேசத்தின் விடுதலையையும் பாடுகிறது மாஹிர் ஸெய்னின் இப்பாடல்.