Monday, September 1, 2014

கோடை தகிக்கிறது நெடுநாளாய் - சு.வில்வரத்தினம்




ஆழக் கிணற்றிலும்
நீர் வத்திப் போச்சு
அள்ளப் போட்ட வாளி
வெறுமனே வருகிறது

கோடை தகிக்கிறது நெடுநாளாய்

வானில் ஒரு பொட்டு
மேகம் கிடையாது
பாலை வெளியில் விரல் நீட்டி
பரிதவிக்கின்றன
மொட்டை மரங்கள்
கனவுகள் உதிர்ந்த மனிதரைப் போல