Wednesday, October 16, 2019

ஒரு கூர்வாளின் நிழலில் – கண்ணீரின் சாட்சியம்




தமிழினியின் “ஒரு கூர்வாளின் நிழலில்“ ஒரு போராளியின் வாழ்நாள் சாட்சியமாக நமக்கு முன் நிற்கிறது.சாதாரண பாடசாலைச் சிறுமியாய் இருந்து 20 வருட போராட்ட வாழ்வில் நுழைந்து, ஒரு கைதியாய் பிடிபட்டு நோயின் காரணமாக மரணித்துப் போகும் வரையான காலத்தை உயிரோட்டமாய் பதிவு செய்திருக்கிறார். தமிழினியின் வாழ்நாளில் தனக்கு முன்னால் தோன்றிய ஒரு போராட்டத்தில் வாழ்ந்து, தன் கண்களுக்கு முன்னாளே அது தோற்றுப் போவதையும் பார்த்து அவர் பேசும் வார்த்தைகள் நம்மை ஆழமாகச் சுடுகின்றன.