Wednesday, May 11, 2011

இரண்டு துறவிகள் ஆற்றைக் கடக்கிறார்கள்...


ஒரு நாள் இரண்டு துறவிகள் ஒரு பயணம் சென்று கொண்டிருந்தார்கள். இடையில் ஒரு ஆறு குறுக்கிட்டது.அப்போது அங்கே ஒரு பெண் நின்று கொண்டிருந்தால். இந்த ஆற்றைக் கடக்க உங்களால் எனக்கு உதவ முடியுமா என்று இருவரிடமும் கேட்டால். ஒருவர் தயங்கிப் பின் நின்றார். மற்றவரோ உடனே அவளை தனது முதுகில் ஏற்றிக் கொண்டு போய் அடுத்த கரையில் விட்டார்.

மறுபடி பயணம் தொடங்கியது.மற்றத் துறவிக்கு இச் செயல் ஆச்சரியமாகவே இருந்தது.தான் பேசாமல் இருக்க முயன்றும் அவரால் முடியவில்லை.தன் மௌனத்தை உடைத்து மற்றத் துறவியிடம் 'சகோதரரே! எமது ஆன்மீகமோ பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் எனக் கற்றுத் தருகிறது. நீரோ அப் பெண்னை முதுகில் வைத்தீரே! எனக் கேட்டார்.

அதற்கு மற்றத் துறவி 'சகோதரரே! நான் அவளை அந்தக் கரையிலேயே வைத்து விட்டேன். நீங்களோ இன்னும் சுமந்து கொண்டிருக்கிறீர்களே! என்றார்.


இணையத்தில் வாசித்ததும் மொழிபெயர்த்தேன்.உங்களுடனும் பகிர நினைத்து...
 

Monday, May 9, 2011

மிக அதிகமாக அன்பு செய்யப்படும் போது...



மிக அதிகமாக  அன்பு செய்யப்படும் போதும்

மிக அதிகமாக  வெறுக்கப்படும் போதும்


நாம் இருக்கிறோம்


உறக்கத்தில் மரிப்பதைப் போல 


மிகச் சிறந்த அன்பு


குருதி சொரியும் வாளைப் போலவும்


மிகக் கொடூரமான வெறுப்பு


ஆக சௌந்தர்யமான  பூக்களின் ஒரு மழையைப்  போலவும்


இருப்பதும்


ஒரு இயல்பு என்பதை


இயல்பாகவே அப்போது நாம்


உணர்வதில்லை


குளிர்கால குளிரைப் போல்


அழுத்தமான தெளிவான


அடையாளங்களுடன்  வரும்


அன்பையும் வெறுப்பையும்


நாம் செயற்கை  என்று


உதாசீனிக்கிறோம்


இரண்டுக்கும்  நியாய அநியாயங்களும்


விதிகளும்


அளிக்கிறோம்


இருட்டில் வெளிச்சத்தைக் காண்கிற ஒரு  பூனையைப் போல்


இரண்டும் 


இயல்பாய்  இருப்பது குறித்து அச்சம் கொள்கின்றன 


கசப்பை அல்லது இனிப்பை 


மட்டுமே 


அருந்தி வாழ்பவர்கள்


ஏதாவதொன்றின்  இன்மையை அல்ல


பேரொளியின்  திகைப்பைத் தான்


அஞ்சுகிறார்கள்


கடவுளும்  சாத்தானும் எங்கிருந்தோ 


ஒரு புள்ளியில் இருந்து வெடித்து தோன்றாதவரை


கடவுளும்  சாத்தானும்


அவர்களுக்கு ஏற்ப 


கசப்பை அல்லது இனிப்பை 


மட்டுமே 


அருந்தி வாழ்பவர்களுக்கு


கசப்பதோ இனிப்பதோ 


இல்லை 


அவர்களை யாரும்


நேசிக்கவோ வெறுக்கவோ


முடிவதில்லை 


வாலை வாய் முழுங்கிய பின்


வால் எங்கிருந்து  தொடங்குகிறது


என்று அவர்களுக்குப்  புரிவதில்லை 


அவர்களால் யாரையும்


நேசிக்கவோ வெறுக்கவோ


முடிவதில்லை 


மிகுந்தோ  மிகாமலோ


              ஆர்.அபிலாஷ்

Sunday, May 8, 2011

குட்டிக் கதையொன்று...


ஒரு நாள் ஒரு சிறுமி தனது தந்தையுடன் பாலம் ஒன்றின் மீது நடந்து சென்று கொண்டிருந்தால்.அவளது தந்தை தன் மகள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார்.அதனால் மகளே! நீ ஆற்றினுள் விழுந்து விடாமல் இருக்க, எனது கையைப் பற்றிக் கொள் என்றார்.

அதற்கு அந்தச் சிறுமி இல்லை தந்தையே! நீங்கள் எனது கையைப் பிடித்துக் கொள்ளுங்கள் என்றால். ஏன் இப்படிச் சொல்கின்றாய்? என்று ஆச்சரியமாகக் கேட்டார் தந்தை.

அதற்கு அந்தச் சிறுமி, 'நான் உங்களது கையைப் பிடித்துக் கொண்டிருக்கும் போது ஏதும் ஆபத்து நிகழுமென்றால் நான் எனது கையை விட்டுவிட இடமிருக்கின்றது. ஆனால் நீங்கள் எனது கையைப் பிடித்துக் கொண்டால் எது நேர்ந்தாலும் என்னை நீங்கள் விட்டுவிட மாட்டீர்கள்' என்றால்...

எந்தவொரு  உறவின் நம்பிக்கையின் அடிப்படை அதனது பிணைப்பிலேயே தங்கியிருக்கின்றது. எனவே நீங்கள் நேசிப்பவரது கரங்களை பற்றிக் கொள்ளுங்கள். அவர் உங்களது கரங்களை பற்றிக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள்.

இந்தக் கதையை ஆங்கிலத்தில் படித்தேன்.மொழி பெயர்த்து உங்களுடனும் பகிர்ந்து கொள்ள நினைத்தேன்.எழுதியவர் பெயர் இருக்கவில்லை.அவருக்கு நன்றி.