Saturday, November 29, 2014

எழுத மறந்த கடிதம்…



கடிதம் எழுதும் பழக்கம் இன்று முற்றாகக் குறைந்து போய் விட்டது. எல்லோரினதும் கடந்த காலம் என்பது எண்ணற்ற கடிதங்களால் நிரம்பியிருக்கின்றது. பாடசாலைக் காலத்தில் தமிழ்ப் பாடத்தில் கடிதம் எழுதும் வழக்கம் இருக்கின்றது.எமது பிறந்த நாளைக்கு அழைத்தோ, வாழ்த்தியோ தொலை தூர நண்பர் ஒருவரை கற்பனை செய்து கொண்டு கடிதம் எழுதுவோம்.அதுவரையில் நிஜமாக யாருக்கும் கடிதம் எழுதிப் பார்த்ததில்லை.இன்றைக்கு ஒரு குழந்தை பாடசாலையில் எழுதும் கடிதமே அது எழுதும் முதலும் முடிவுமான உறவுமுறைக் கடிதமாக மாறிவிட்டது.

Monday, November 3, 2014

நோபல் விருதின் அரசியல்! – கெளதம சித்தார்த்தன்


 உலகளவில் கவனத்தைக் கவரும் நோபல் விருதுகள் குறித்து காலங்காலமாக விமர்சனங்களும் சர்ச்சைகளும் எழுந்து கொண்டேயிருப்பது வாடிக்கைதான் என்று, அந்த விமர்சனக் கருத்துக்களை  மலினப்படுத்துவதும், அலட்சியப்படுத் துவதுமான போக்கைத் தொடர்ச்சியாக, சர்வதேச வெளியில் உருவாக்கிக் கொண்டே வந்திருக்கிறது நோபல் விருதுக்குழு. அப்படியான விமர்சனங்களை யும்,   செயல்பாடுகளையும் மாற்றுப்பார்வை கொண்ட சிந்தனையாளர்களும், முற்போக்கு எண்ணங்கள் கொண்ட எளிய மனிதர்களும் முன்வைக்கும்போது, அதைப் பகடி செய்து அலட்சியப்படுத்தும் உளவியலை சர்வதேச அளவில் வெற்றிகரமாக உருவாக்கி வைத்திருப்பதுதான் நோபல் அமைப்பின் மகதத்தான சாதனை.