Tuesday, October 29, 2013

அன்றாட விவகாரங்களிலிருந்து வலுவான செய்தியைச் சொல்லவே நான் முயற்சிக்கிறேன்.-அவன்த ஆடிகல



அரசியல் கேளிச் சித்திரங்களுக்கு உலக அளவில் பெரிதும் வரவேற்பு காணப்படுகிறது.சமகால அரசியலை கேலிச் சித்திரமே ஆழ்ந்த விமர்சனத்திற்கு உட்படுத்துகிறது.இலங்கையின் புதிய தலைமுறையைச் சேர்ந்த ஓவியர் அவன்த ஆடிகல தனித்துவமான கேலிச்சித்திரங்களை வரைபவர்.சிறந்த கார்டூனுக்கான விருது இருமுறை இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.“அத“ மற்றும் டேய்லி மிரர் பத்திரிகையில் ஓவியராகப் பணியாற்றுகிறார்.

Tuesday, October 22, 2013

ஒவ்வொரு பொழுதில் ஒவ்வொரு வாழ்க்கை: இடை வெளிகளை இட்டு நிரப்பும் நூல்

காயல்பட்டினம் கே.எஸ்.முஹம்மது ஷுஐப் அவர்கள் எனது நூலுக்கு எழுதிய அறிமுகக் குறிப்பு இம்மாத “சமரசம்“ இதழில் வெளியாகியுள்ளது. நன்றியுடன் இங்கு பிரசுரிக்கிறேன்.
 
ஆன்மீக தளத்தில் இயங்கும் எல்லா மதங்களும் இவ்வுலக வாழ்க்கையை புறக்கணிக்கச் சொல்கின்றன. இஸ்லாத்தை தவிர. இந்த வாழ்வும், இந்த உடலும் நிலையற்றவை. எனவே, அவைகளை பராமரிக்கத் தேவையில்லை என்பது அவைகளின் உள்ளடக்கம். “காயமே இது பொய்யடா...” சித்தர்கள் வாக்கும் இதனடியில் பிறந்ததே.

Monday, October 14, 2013

நீரில் எழுதப்பட்டிருக்கும் மீனை பூனை வாசிக்கிறது- கவிதைச் செயல் அனுபவம்



கவிஞர் அஹமது ஃபைஸல் தனது “நீரில் எழுதப்பட்டிருக்கும் மீனை பூனை வாசிக்கிறது“கவிதைத் தொகுதியை எனக்கு தபாலிட்டிருந்தார். கவிஞருடன் நெருங்கிப் பழகிய அனுபவமோ அவரை நேரில் சந்தித்ததோ கிடையாது.அவரது அன்பை நான் மெச்சுகிறேன்.
 
புத்தகத்தை எனது குட்டித் தங்கை புரட்டிப் பார்த்தாள்.உள்ளே இருக்கும் அறிமுகக் குறிப்பில் படித்து அவரது “ஆயிரத்தோராவது வேதனையின் காலை“  சிறப்பான தலைப்பு என சிலாகித்தாள்.அப்படியானால் இந்தத் தலைப்பில் அவளுக்குப் பிடிப்பு ஏற்படவில்லை போலும்.பின்னொரு நாளில் இந்தத் தலைப்பை அவள் புரியக்கூடும்.அப்போது அது குறித்து எழுதுவாள் என்று நம்புகிறேன்.