Tuesday, September 29, 2015

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்





‘வாழ்வதற்கான பக்குவத்தை யாரும் திருமணப் பத்திரிகையில் அச்சடிப்பதில்லை’

இந்த வாசகத்தை என் முகநூல் பக்கத்தில் எப்போதோ நான் பகிர்ந்திருக்கிறேன். இச் சிறிய வாசகத்தில் ஆயிரம் அர்த்தங்கள் நிறைந்திருக்கின்றன. திருமணம் என்பது வாழ்க்கையில் நடக்கும் ஒரு முக்கிய நிகழ்வு. பிறந்ததற்குப் பிறகு மனிதன் கொண்டாடப்படும் இரண்டாவது தருணம் அது.வாழ்க்கையில் ஒரு துணையைத் தேடுவதும் தெரிவு செய்வதும் மனிதனுடைய ஏனைய எல்லாத் தெரிவுகளையும் தேடல்களையும் விட வித்தியாசமானதாகவும் விசித்திரமானதாகவும் இருக்கிறது.

Monday, September 21, 2015

நல்ல படம் எடுப்பவர்களை உருவாக்குவதும் அவற்றைப் பார்ப்பதற்கு மக்களை தயார் பன்னுவதுமே எமது பணி - தமிழ் ஸ்டுடியோ அருண்





அருண்,இந்தியாவைச் சேர்ந்தவர். லண்டன் பல்கலைக்கழகம் ஒன்றில் திரைப்பட டிப்ளோமோ முடித்திருந்தாலும் திரைப்பட உருவாக்கத்தில் ஈடுபடாமல், தமிழ் குறும்படங்களை ஊக்குவிக்கும் பாதையை தேர்ந்தெடுத்தவர்அருண்.2008 ஆம் ஆண்டு  thamizhstudio.com என்ற இணையத்தை ஆரம்பித்தார். துவங்கும் போது குறும்பட ஆர்வலர்களுக்கான ஒர் இணைய வெளியாகவே அது இருந்தது. ஆனால் அடுத்த வருடமே அருண் அதை ஒரு இயக்கமாக மாற்றினார்.

Sunday, July 19, 2015

கொங்க்ரீட் காடுகளில் தொலையும் வாழ்க்கை




“கிராமம்,பாட்டிகளின் சுருக்குப் பையில் உள்ள சில்லறைகளைப் போன்றது.சுருக்குப் பைகளின் உலகம் வேறு உலகம்.அதன் முடிச்சுக்கள் பிரியங்களால் ஆனவை.காலத்தின் இடுப்பில் அதே பழைய வாஞ்சையுடன் நிராதரவாய்த் தொங்கிக் கொண்டிருப்பவை.அதன் எளிமையும் அழகும் எந்தவிதத்திலும் நம்மை நோக்கிச் சவால் விடாதவை. ஒரு மலைப் பிரதேசத்துக் காற்று மாதிரி எப்போது கேட்டாலும் பிள்ளைகளுக்கும் பேரன்களுக்கும் எடுத்துக் கொடுக்க,அதில் இன்னமும் சில்லறைகள் இருந்து கொண்டிருக்கின்றன…மாநகரம் அப்பாவின் சட்டைப் பையில் உள்ள ரூபாய் நோட்டுக்களைப் போன்றது.அப்பாவின் உலகம் திறக்கவே முடியாத கதவுகளால் ஆனது.அதன் ஒவ்வொரு வாசலிலும் கண்டிப்புகளால் ஆன கனத்த பூட்டு.“ நா.முத்துக்குமார்

Wednesday, May 27, 2015

வளவையின் மடியிலே:ஒரு சிறிய குறிப்பு

மானுடப் பெறுமானங்களுக்காக நேர்மையுடனும் துணிச்சலுடனும் இயங்கிய ஒரு கலைஞர் எம்.எச்.எம் ஷம்ஸ். தென்னிலங்கை மாத்தறை மாவட்டத்திலுள்ள திக்குவல்லை எனும் கிராமத்தில் 1940.மார்ச் 17 இல் பிறந்தார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்று இலங்கை ஆசிரிய சேவையில் சேர்ந்த இவர் பல உயர்நிலைப் பள்ளிக்கூடங்களிலும் தமிழாசிரியராகப் பணியாற்றி இறுதியாக மதுராபுரி அஸ்ஸபா முஸ்லிம் பாடசாலையில் தமிழாசிரியராக இருந்து 1992 ஆம் ஆண்டின் இறுதியில் ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் இலங்கையின் நாளேடான தினகரன் ஆசிரிய பீடத்தில் சில ஆண்டுகள் பணியாற்றினார்.
ஷம்ஸ் அவர்கள் சிறுகதை,நாவல்,கவிதை,பாடல்,இசை,மொழிபெயர்ப்பு என பல துறைகளுடன் இயங்கியவர்.அவரது 15 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு வளவையின் மடியிலே அண்மையில் வெளிவந்துள்ளது.அவர் மரணித்து 13 ஆண்டுகளின் பின்னர் இத்தொகுதி வெளிவந்துள்ளது என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

Monday, May 11, 2015

இன்னும் கொடுக்காத பரிசு…


“கொடுப்பவரின் விருப்பமும் பெற்றுக் கொள்பவரின் விருப்பமும் இணையும் ஒரு அபூர்வமான தருணத்தில்தான் ஒரு உண்மையான பரிசு உருவாகிறது.வாழ்க்கையில் எல்லா பரிசுகளுக்கும் ஒரு விலை இருக்கிறது.அது கடையில் செலுத்தப்படும் விலை மட்டுமல்ல:நமது வாழ்க்கையில் செலுத்தும் விலை.நமது இதயத்தின் ஆழத்தில் செலுத்தும் விலை அது.“ மனுஷ்யபுத்திரன்.
 
பரிசுகள் கொடுப்பதும் எடுப்பதும் ஒரு சம்பிரதாயம் மட்டுமல்ல அது ஒரு வாழ்முறை.உறவுகளை அன்பினால் பிணைக்கும் பெருங் கருணை அது. கடந்த காலத்தின் நினைவுகள் போல பரிசுகளும் வாழ்க்கையின் சுவடுகளாக இதயத்தில் தங்கிவிடுகின்றன.

Tuesday, April 14, 2015

நாகூர் ஈ.எம் ஹனீபா - முடிந்த பிறகும் கேட்கும் பாடல்






நாகூர் ஈ.எம் ஹனீபாவின் மரணச் செய்தி தமிழ் கூறும் நல்லுலகில் அனைவர் மனதிலும் சோகத்தையே ஏற்படுத்தியுள்ளது.தம் வாழ்வோடு நெருக்கமாய் சகவாசம் கொண்ட ஒரு கலைஞனைப் பிரிந்த துயரம் எல்லோர் மனதிலும் படர்ந்திருக்கிறது.தமது அன்றாட வாழ்வில் அவரது குரலும் ஒன்றாய் கலந்துந்துவிட்ட நிலையில் அவர் எங்களைவிட்டும் பிரிந்திருக்கிறார்.அல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து அருள் புரியட்டும்.

Monday, March 2, 2015

சுவர்களோடு பேசுதல்


ஒரு முதியவர் இறக்கும் போது ஒரு உலகம் முடிந்து போகிறது என்பார்கள்.வயோதிபம் ஒரு காவியத்தின் முடிவுறும் தருணம் போன்றது. அவ்வளவு பரிவு மிகுந்த அந்த வயதின் இயல்புகளை சாதாரணமாகப் புரிந்து கொள்ள முடியாது.வாழ்க்கையை முடித்துக் கொள்ளக் காத்திருக்கும் ஒருவரை நாம் நெருக்கமாகக் காணும் போது முகத்தின் மீது படிந்துள்ள மரணத்தின் ரேகைகள் சொல்ல முடியாத வலியை ஏற்படுத்திவிடுகிறது.

Friday, February 6, 2015

தாய் மொழியில் அமைந்த படைப்பாக்கக் கல்வியே இன்றைய தேவை - ஆயிஷா இரா. நடராசன்




இரா. நடராசன் , 2014 ஆம் ஆண்டிற்கான பால சாகித்திய அகாதமி விருது பெற்ற சிறுவர் இலக்கிய எழுத்தாளர் இவர் எழுதிய ஆயிஷா எனும் சிறுகதை ஏற்படுத்திய தாக்கத்தால் இவர் ஆயிஷா நடராசன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.எளிய தமிழில் அறிவியல் கருத்துகளையும், சில மொழி பெயர்ப்பு நூல்களையும், மாணவர்களுக்கு உதவக்கூடிய எளிய அறிவியல் சோதனைகள் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார்.

இயற்பியல், கல்வியியல் மேலாண்மை, உளவியல் ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர். கடலூரில் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இரா,நடராசன் பணியாற்றி வருகிறார். கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து புத்தகங்களுக்காவே வெளிவரும் 'புத்தகம் பேசுது' மாத இதழின் ஆசிரியர்.மீள்பார்வைக்காக அவருடன் மேற்கொண்ட நேர்காணல் இது.இந்த நேர்காணலுக்காக அவரைப் பலமுறை தொடர்பு கொண்ட போதும் அவரது அன்பில் எதுவும் குறையவில்லை.அவரது அன்புக்கு நன்றி.