Monday, February 21, 2011

I Am Your Hope- Dedicated to our yoth




You are the hope for our globe

Don't give up nor despair

There's nothing you can't repair

You can change this world to a better world

With your souls, with your souls

Do not harm me, I am your truth

Do not kill me, for I'm your youth

I am your hope, I am your truth

I'm your faith, I'm your youth

Bil-qawli wal amal, Antumul amal
(With words and action, You are the hope)

Salimhum Ya Rabb, Salimhum Ya Rabb
(Grant them peace Oh Lord, grant them peace Oh Lord)

Bil-ilmi wal-qalam, Yudfa'u al-Alam
(Through knowledge and the might of the pen, Pain will be pushed aside)

La tansani ana dhamiruk, La tu'zini ana shababuk
(Don't forget me for I'm your conscience, Don't harm me I'm your youth)


Composed and produced by Sami Yusuf
Lyrics by Dr. Walid A. Fitaihi

Sunday, February 13, 2011

ஈரான் திரைப்பட வாரம்

ஈரான் திரைப்பட வாரம் கடந்த 7ம் திகதி முதல் 11ம் திகதி வரை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் நடைபெற்றது.ஈரான் இஸ்லாமியப் புரட்சியின் 32 வது வரு டத்தை முன்னிட்டே இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இயக்குனர் பௌ ரான் தெராக்ஷாந்தேயின் 5 திரைப்படங்கள் திரையிடப்பட்டதோடு 12ம் திகதி இயக் குனரோடு கலந்துரையாடலும் இடம் பெற்றது.ஜந்து நாட்களும் இயக்குனர் அவர்கள்  இந்த நிகழ்வில் கலந்து கொண் டது இங்கு முக்கியமானது.
 
  பௌரான் தெராக்ஷாந்தே 1951ல் பிறந்தவர். இவர் ஒரு இயக்குனர், எழுத் தாளர், ஆய்வாளர்.1975ல் சினிமாத் துறை யில் பட்டம் பெற்றார்.ஆரம்பத்தில் அதிக மான ஆவணப்படங்களையே தயாரித் தார்.இவர் ஈரானின் முதல் பெண் திரைப் பட இயக்குனர் மற்றும் ஹொலிவூடில் படம்  தயாரித்த முதல் ஈரானியருமாவார்.



Relationship (1986), A little bit Happiness (1987), Passing Through the Dust(1988), Lost Time(1989),A Love Without Frontier(1998), Candle in  the Wind(2003),Wet Dream(2005), Eternal children2006), Twenty (2008)  Professionals(2008) Endless       Dream(2009)என்பன இவரது திரைப்ப டங்களாகும்.
 
 
இவர் தனது படங்களுக்காக பல தேசிய மற்றும் சர்வதேசிய விருதுகளை வென்றிருக்கிறார்.  பௌரான் தெரா க்ஷாந்தே  Khovarmehr Film corporation  இன் பிரதித் தலைவராவார். அவரைச் சந்திக்கவும் உரையாடவும் வாய்ப்புக் கிடைத்தது. நீங்கள் எனது படங்களைப் பார்த்து ரசிப்பதும் கருத்துச் சொல்வதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகச் சொன்னார்.
 
 

அவரது
A Love Without Frontier(1998), Eternal Children (2006), Twenty(2008),   Wet Dream(2005) Lost Time(1989) ஆகிய படங்கள் இலங்கையில் திரையிடப்பட்டன. படங்கள் குறித்த விமர்சனத்தை வரும் நாட்களில் எதிர்பாருங்கள். இன்ஷா அல்லாஹ்.
 
 
 
 பௌரான் தெராக்ஷாந்தேயுடன்

 
 

Tuesday, February 8, 2011

அந்தியில் எழும் கவிதை...



சொந்த ஊரின் வாசம் தொலைத்து
நகரங்களில் வசிப்பவர்களுக்கு
வருத்தத்தையே கொடுக்கிறது
தனிமை.

ஒரு மழைத்துளியின் அடர்த்தி போல
எப்போதும் அது ஈரத்தைத் தருகிறது

யாருடனாவது தொலைபேசியில் பேச
இறந்தவைகளை மீட்டிப் பார்க்க
வைக்கிறது

பிறகு
எதையாவது நினைக்க வைத்து
கவனத்தைக் கலைக்கிறது

இழந்தவைகளை
அடையத் தூண்டுகிறது

மறக்க முடியாத ஒரு நிகழ்வை
அடிக்கடி நினைக்க வைத்து

இதயத்தை கனக்க வைத்துவிடுகிறது
வாழ்வை நொந்து கொள்ளச் செய்கிறது

ஒரு பட்டாம் பூச்சியின் சிறகுகள்
உதிர்வது போல
சந்தோசத்தை உதிர்த்துவிடுகிறது

நினைவின் எல்லாத் தொலைவுகளையும்
ஒரு முறை சுற்றி வந்து
நடுக்கத்தை ஏற்படுத்துகின்றது.

வெறுமை என்றால் என்னவென்பதை
நமக்குக் கற்பிக்கின்றது.

மறைந்திருக்கும் கண்ணீர்த் துளிகளை
வரவழைத்துவிடுகிறது

பின்
இந்த அந்தியில் எழும் இந்தக்
கவிதையை
எழுத வைத்துவிடுகிறது
தனிமை
                    2011.02.07