Wednesday, July 31, 2013

எம்.எச்.எம் ஷம்ஸ் - கலையை ஆயுதமாக்கிய கலைஞன்


வீட்டில் அப்போது ஒரு கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சிதான் இருந்தது.மாலை செய்திகளைத் தொடர்ந்து “வெள்ளிச் நிறகடிக்கும் வென் புறாவே“ பாடல் ஒளிபரப்பாகும்.அப்பாடலைக் கேட்க எல்லா விளையாட்டுக்களையும் விட்டுவிட்டு என் 12 ஆவது வயதில் தொலைக்காட்சிக்கு முன்னால் வந்து அமர்வேன். போரின் அவலங்களை துயரின் வலி சிந்தும் உணர்வுகளோடு பதியப்பட்ட பாடல் அது.மூன்று தசாப்தங்களின் மொத்த வலியையும் அப்பாடலினூடு நாம் இப்போதும் புரிந்து கொள்கிறோம்.

Wednesday, July 17, 2013

நட்புக்காக சில வார்த்தைகள்



                                                        

நண்பர் சாளை பஷீர் எனது புத்தகத்திற்கு எழுதிய அறிமுகக் குறிப்புகள் இவை.நன்றியுடன் பிரசுரம் செய்கிறேன்.
          
இலக்கிய வாதியான எனது நண்பர் அடிக்கடி சொல்லுவார் , “இறைவனை எப்போதும் கையில் பிரம்புடன் கூடிய தண்டனைக்காரனாகவே சம கால முஸ்லிம் சமூகம் சித்தரித்து வந்துள்ளது. மயிலிறகுடன் கூடிய கருணை நிறைந்த இறைவனை ஏன் அவர்கள் காட்ட மறுக்கின்றனர் ?”

Wednesday, July 10, 2013

நூல் அறிமுக நிகழ்வு



எனது  “ஒவ்வொரு பொழுதில் ஒவ்வொரு வாழ்க்கை“ நூல் அறிமுக நிகழ்வு கடந்த 07.07.2013 ஞாயிற்றுக்கிழமை ஹன்தெஸ்ஸ அல்மனார் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பேராதனைப் பல்கலைக்கழக மெய்யியல் துறைப் பேராசிரியர் கலாநிதி எம்.எஸ்.எம் அனஸ் அவர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.