Friday, February 15, 2013

மொஹிதீன் பெய்க்: நகலெடுக்க முடியாத குரல்


அப்போது எனக்கு 14 வயதுதான் இருக்கும் என்று நினைக்கிறேன்.எனது வாப்பாவின் தங்கை ஒருவர் வெளிநாடு சென்று வந்திருந்தார். இரண்டு பொருட்களைத் தவிர அவர் என்னென்ன பொருட்கள் கொண்டுவந்தார் என்று எனக்கு நினைவில் இல்லை. ஒன்று ஒரு விளையாட்டு விமானம் மற்றது மொஹிதீன் பெய்க்கின் பாடல்கள் அடங்கிய ஒரு ஒலிப்பேழை). அந்த விமானம் இப்போது இல்லை.ஆனால் ஒலிப்பேழை இருக்கிறது.

மொஹிதீன் பெய்க் இந்தியாவின் தமிழ் நாடு,சேலத்தில் 1919 டிசம்பர் 5 இல் பிறந்தார்.1932 ஆம் ஆண்டு இலங்கைக்கு இடம்பெயர்ந்தார்.இசையின் தேடல் எப்போதும் அவரைத் துரத்திக் கொண்டே இருந்தது.வேறு விடயங்களில் அவர் நாட்டம் கொள்ளவில்லை.கல்வியில் ஆர்வம் இல்லை என்பதை அவரது தலைமை வாத்தியார் ஒரு முறை தந்தையை அழைத்துச் சொல்லிவிட்டார்.அடுத்த நாள் திருச்சியிலுள்ள ஒரு நடனக் கம்பனிக்கு பெய்க் ஓடி விட்டார்.தனது உஸ்தாதுடனே இருக்கப் போவதாக வீட்டுக்குச் சொன்னார்.

Sunday, February 10, 2013

இறந்த வீட்டில் வசிப்பவர்கள்


நண்பர் பகல் நிலவனின், கட்டடக்கலையை எளிமையாகவும் கவித்துவமாகவும் சூழலுக்கு பாதிப்பில்லாமலும் அமைக்கலாம் என்பதனை தெளிவு படுத்தும் ஒரு அருமையான கட்டுரை.அவசியம் அனைவரும் படிக்க வேண்டியது.


'சுவர்களும் அதற்கு கதவுகளும் கொண்ட எனது வீட்டிற்கு நான் செல்ல வேண்டும், எனக்கான குடியிருப்பு என்று உலகின் எந்த ஒரு மூலையில் கிடைத்தாலும் அதைப் பற்றிய கவலை எனக்கில்லை, அது அட்லாண்டிக் கடலின் மீது இருந்தாலும் சரியே......'.

சமீபத்தில்  வாசித்த கட்டுரையில் வரும் வரிகள் அவை.
இந்த நிலப் பரப்பில் தனக்கென சிறியதாகவோ பெரியதாகவோ ஒரு வாழ்விடம் வேண்டும் என விரும்பாத மனிதர்களே இல்லை.
பறவைகளும் விலங்குகளும் காட்டில் வசிக்கும் ஆதி வாசி மனிதர்களும் தங்களுக்கான வசிப்பிடத்தை இயற்கையை ஒட்டியே அமைத்துக்கொள்கின்றனர். இயற்கையும் தனது பசுமையான கரங்களைக்கொண்டு அவைகளை ஆதுரத்துடன் பொதிந்து கொள்கின்றது.
ஆனால் நாட்டில் வாழும் மனிதன் தனது இருப்பிடத்தை . காடு, வயல்,மலை , நீர் நிலைகளை அழித்து அமைக்கின்றான்.  இயற்கையின் பேரழிவுகளில்தான் தான் வாழ இயலும் என உறுதியாக நம்பவும் செய்கின்றான்.