Thursday, January 26, 2012

என்னைப் பொலிஸ்காரன் என்றழைத்த பெண்...



எல்லா ஊர்களிலும் விசித்திரமானவர்களும் ஸ்வாரஷ்யமானவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் எல்லோருடனும் நாம் நெருங்கிப் பழகுவதில்லை. இருந்தாலும் அவர்களது வார்த்தைகளையும் செயல் களையும் நாம் ரசிக்கத் தவறுவதில்லை.அத்தகைய பாத்திரங்கள் எம் நினைவில் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.

எனக்கும் ஊரில் அத்தகைய பாத்திரங்கள் சிலர் இருக்கிறார்கள்.இப்போது கொழும்பிலும் சிலர் இருக்கிறார்கள்.அவர்களது செயல்கள் விசித்தி ரமாகவும் வித்தியாசமாகவும் இருக்கின்றன. மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு சிறுவன் எப்போதும் பள்ளி செல்லும் வழியில் பணம் கேட்டு அமர்ந்தி ருப்பான். அவன் தொழுகைக்க்காக பள்ளிவாசலுக்கும் வருவதுண்டு.ஒரு நாள் தொழுகை முடிந்து வரும் போது தன் பொக்கட்டினுல் கையை விட்டு 10 ரூபாயை எடுத்து முன்னால் இருந்த யாசகனுக்குக் கொடுத்தான்.அவரோ அவனை ஆச்சரியம் மேலிடப் பார்த்துக் கொண்டிருந்தார்.அதனிலும் ஆச்சரியம் என்னவென்றால் மறுகனமே அவன் கைகளை ஏந்திக் கொண்டு நின்றிருந்த்துதான்.

அத்தகைய பாத்திரங்களின் எல்லாச் செயல்களும் ரசிக்கப்படவே செய் கின்றன.கடைத் தெருக்களில் அவை ஸ்வாரஷ்யமான பேசு பொருளாகக் கதைக்கப்படுகின்றன.அத்தகையவர்களின் மரணம் எல்லோரையும் கண் கலங்கவே செய்துவிடுகின்றது என்பதனை நான் பல தடைவை கண்டும் கேட்டுமிருக்கிறேன்.

இன்றும் எனது ஊரில் அப்படி ஒருவரின் மரணம் நிகழ்ந்ததாக செய்தி அறிந்து கவலைப்பட்டேன்.

எப்படியும் அவருக்கு 45 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்.ஒரு மாதிரியான மனநிலை கொண்டவர்.தெரு நெடுக எதையாவது சொல்லிக் கொண்டு,யாருக்காவது ஏசிக் கொண்டுதான் செல்வார். அந்தப் பேச்சில் ரசிப்பதற்கு ஏதோ ஒன்றிருக்கும்.

ஊரில் யார் வீட்டிலாவது ஏதேனும் விழாவோ வைபவமோ இருந்தால் அது எல்லோருக்கும் அறியும் படி செய்துவிடுவார்.அதே போல அவருக்கு யாரேனும் நலவோ கெடுதியோ செய்தாலும் அப்படித்தான்.பணமோ பொரு ளோ கொடுத்தால் அதிகம் மகிழ்வார்.

ஊர் மொழியின் கொச்சைப் பாஷையில் அவர் சொல்லிச் செல்லும் வார்த் தைகள் இன்னும் காதோரம் இருக்கின்றது.அவை யாருக்கும் சிரிப்பை வரவ ழைக்க்க் கூடியவை. என் குட்டித் தங்கையும் அவற்றைச் சொல்லிச் சிரிப்பாள்.

அவர் என்னைப் “பொலிஸ்காரன்“ என்றுதான் அதிக சந்தர்ப்பங்களில் அழைப்பார்.சில போது “கண்ணாடி“ என்பார்.ஏனெனில் நான் கண்ணாடி அணிந்திருப்பதால்.இருந்தும நான் அவரை ஒருபோதும் கடிந்து கொண்டதில்லை.

ஒரு நாள் என் வீட்டிற்கு இரண்டு வெளியூர் நண்பர்கள் வந்தி ருந்தார்கள்.அது “கிறீஸ் மனிதன்“ குழப்பம் நிலவிய காலம்.நாங்கள் வீட்டினுல் அமர்ந்து கதைத்துக் கொண்டிருந்தோம்.திடீரென அப் பெண் வீட்டினுள் நுழைந்தார்.புதியவர்களைக் கண்டதும் உடனே திரும்பிவிட்டார்.
நேராக அவர் பக்கத்து வீட்டிற்குப் போயிருக்கிறார்.எங்கள் வீட்டிற்கு இரண்டு “கிறீஸ் மனிதர்கள்“ வந்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.பின்னர் செய்தியறிந்து நாம் விழுந்து விழுந்து சிரித்தோம்.

சிலவேலை அவர் புதியவர்கள் என்பதனை கிறிஸ் என்ற சொல்லினூடாக நாடியிருக்கலாம். அல்லது இருவரும் கிறிஸ் மனிதர்கள் போல அவ ருக்குக் காட்சியளித்திருக்கலாம்.

கொஞ்ச நாளைக்கு முன்னர் அவர் குளிர் காய்வதற்காக அவர் அடுப்பை மூட்டிவிட்டு முன்னால் அமர்ந்திருந்திருக்கிறார்.திடீரெனத் தீ மேனியில் தாவி எரி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இன்று அவர் மரணித்துவிட்டதாக செய்தி வந்த்து.வீட்டிற்கு வந்த கிறீஸ் நண்பன் ஒருவனிடம் செய்தியைச் சொன்னேன். இது போன்ற மரணங்கள் கவலையைத் தருபவை என்றான்.இனிமேல் என்னை யாரும் பொலிஸ் காரன் என்று அழைக்கப் போவதில்லை.



No comments:

Post a Comment