Wednesday, May 11, 2011

இரண்டு துறவிகள் ஆற்றைக் கடக்கிறார்கள்...


ஒரு நாள் இரண்டு துறவிகள் ஒரு பயணம் சென்று கொண்டிருந்தார்கள். இடையில் ஒரு ஆறு குறுக்கிட்டது.அப்போது அங்கே ஒரு பெண் நின்று கொண்டிருந்தால். இந்த ஆற்றைக் கடக்க உங்களால் எனக்கு உதவ முடியுமா என்று இருவரிடமும் கேட்டால். ஒருவர் தயங்கிப் பின் நின்றார். மற்றவரோ உடனே அவளை தனது முதுகில் ஏற்றிக் கொண்டு போய் அடுத்த கரையில் விட்டார்.

மறுபடி பயணம் தொடங்கியது.மற்றத் துறவிக்கு இச் செயல் ஆச்சரியமாகவே இருந்தது.தான் பேசாமல் இருக்க முயன்றும் அவரால் முடியவில்லை.தன் மௌனத்தை உடைத்து மற்றத் துறவியிடம் 'சகோதரரே! எமது ஆன்மீகமோ பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் எனக் கற்றுத் தருகிறது. நீரோ அப் பெண்னை முதுகில் வைத்தீரே! எனக் கேட்டார்.

அதற்கு மற்றத் துறவி 'சகோதரரே! நான் அவளை அந்தக் கரையிலேயே வைத்து விட்டேன். நீங்களோ இன்னும் சுமந்து கொண்டிருக்கிறீர்களே! என்றார்.


இணையத்தில் வாசித்ததும் மொழிபெயர்த்தேன்.உங்களுடனும் பகிர நினைத்து...
 

1 comment:

  1. Ippa ellam english thaan read panreenga pola nice nice.

    ReplyDelete