Thursday, November 25, 2010

எனக்குமொரு அழைப்புத்தா...



 உனக்கு
அழத்தோன்றும் ஒரு நாளில்
எனக்குமொரு அழைப்புத்தா...
சத்தியமாய் நானுன்னை
சிரிக்கப் பண்ண மாட்டேன்.
நிச்சயமாய் என்னாலும்
சேர்ந்தழ முடியும்.


உனக்கு தூரத்தே எங்காவது
ஓடிவிடத் தோன்றும்
ஒரு நாளிலும்
அச்சமின்றி எனக்கொரு
அழைப்புத் தா...
சத்தியமாய் நானுன்னை
நின்றுவிடக் கேட்க மாட்டேன்
நிச்சயமாய் என்னாலும்
சேர்ந்தோடி வர முடியும்.


உனக்கு
அனைத்துக் குரல்களும்
கசக்குமோர் நாளிலும்
எனக்கொரு அழைப்புத் தா
சத்தியமாய் நான் வந்து
குரலெலுப்பிப் பேசமாட்டேன்.
நிச்சயமாய் என்னாலும்
நிசப்தமாய் இருக்க முடியும்...!


ஆனால்...
நீயாக அழைக்குமோர் நாளில்
என் பக்கம்
நீண்ட நிசப்தமிருந்தால்..
வேகமாய் வந்து
என்னைப் பார்!
சேர்ந்தழவோ,
நிசப்தமாய் விழி பார்த்து
அமர்ந்திருக்கவோ,
அன்றைக்கு என் தேவை
நீயாக இருக்கலாம்...


இணையத்திலிருந்து பெறப்பட்டதாகக் கூறி இந்தக் கவிதையை நண்பர் ஸப்ராஸ் எனக்கு 2007.02.10 ம் திகதியன்று தபாலிட்டிருந்தார்.

1 comment:

  1. Sweet memories , missing the happiest moments in life, glad that you have this poem with you. and thank you sharing.

    ReplyDelete