Monday, March 12, 2012

கெமராக்காரன் வரும் போது...


கெமராக் காரன் வரும் போது எல்லோரும்
தம்மைக் கொஞ்சம் சுதாகரித்துக் கொள்கிறார்கள்

தலைகளைக் கொஞ்சம் கைகளைக் கொண்டு
சீவிக் கொள்கிறார்கள்

தம் பார்வைகளை ஒரு சின்னப் போஸுக்கு
தயார்படுத்திக் கொள்கிறார்கள்

நாம் கவனிக்கப்படுகிறோம் என்பதனை
மறைத்துக் கொள்ள முயல்கிறார்கள்..

சிலர் கெமராவின் பார்வையிலிருந்து
தப்பித்துக் கொள்ள அதிகபட்சம்
முயற்சிக்கிறார்கள்.

இது எப்போது எந்தத் தொலைக்காட்சியில்
ஓளிபரப்பாகும் எனக் கேட்கத் தொடங்கிவிடுகிறார்கள்.

இவர்கள் போட்டோ எடுத்தென்ன
அமெரிக்காவுக்கா அனுப்பப் போகிறார்கள்
என ஒருவர் கேட்கும் போது
கெமராவைத் தூக்கியிருக்கின்ற கை
இன்னும் வலிக்கத் தொடங்கிவிடுகிறது...

1 comment: