Sunday, April 3, 2011

மகிழ்ச்சிக் கிண்ணம்...


2011 உலகக்கிண்ண இறுதிப் போட்டி மிகுந்த பரபரப்போடு உலகம் முழுதும் ரசிக்கப்பட்டது. இலங்கையில் எல்லா மதத்தவர்களும் இலங்கை அணிக்கு தமது ஆதரவைத் தெரிவித்து மிகுந்த உற்சாகத்தோடு அன்றைய நாளைக் கழித்தனர். சனிக்கிழமை காலையே தேசியக் கொடிகளை வாகனங்களில் ஏந்திக் கொண்டு மக்கள் பயணிக்கலானார்கள்.மாலை நேரமாகும் போது கொழும்பு முழுவதும் தேசியக் கொடிகளுடன் பெருந்திரளான மக்கள் வீதிக்கு வந்தார்கள்.குறிப்பாக முஸ்லிம் பிரதேசங்களில் பெரிய ஏற்பாடுகளுடன் அனைவரும் வீதியில் இருந்தார்கள்.

புதுக்கடை, பாபர் வீதி, கொம்பனித்தெரு, மாளிகாவத்தை,போன்ற இடங்களி லும் முஸ்லிம்கள் வாழும் ஏனைய பிரதேசங்களிலும் இலங்கை அணியை ஆதரித்து வெற்றிக்காகக் காத்திருந்தார்கள்.காலிமுகத்திடல் சனத்திரலாள் நிரம்பி வழிந்தது.
 
ஒரு நாட்டின் மொத்த சனமும் தமது நாட்டுக்காக ஒன்று திரண்டதை நேரிலேயே கண்டேன்.நள்ளிரவு வரை மக்களுடனேயே விளையாட்டை ரசித்தேன்.கொண்டாட்டம் என்பது எவ்வளவு குதூகலத்திற்குரியது...
 
e media சகோதரர்களுடன் ஒளிப்பதிவில் நள்ளிரவு வரை இருந்தேன்.ஒரு நாட்டின் சந்தோசத்தையும் கவலையையும் பதிவு செய்ய முடிந்தது.

எல்லோரும் வெற்றிக்காகவே காத்திருந்தார்கள்.இலங்கையணி வென்றி ருந்தால் நேற்றைய இரவு இலங்கை வரலாற்றிலே மகிழ்ச்சி மிக்க இரவாக இருந்திருக்கும். என்ன செய்ய.. யாரும் விளையாடத் தெரியாமல் தோற்ப தில்லையே!

எமது நாட்டிற்கு எப்போதும் நாம் விசுவாசமானவர்கள் என்பதை எமது மக்கள் நிரூபித்திருக்கிறார்கள்.

 நேற்றுப் பிடித்த புகைப்படங்களிலேயே நீங்கள் அதனைக் கண்டு கொள்ளலாம். e media வின் கமெராவுக்குள்ளால் பிடித்த சில புகைப்படங்கள்..








 










































































































































































































































































































































1 comment: