Tuesday, July 19, 2011

நிராசையின் தினத்தில்...



நிராசையின் தினத்தில்
என் உள்ளங்கையையே
நான் பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கிறேன்

நான் அதற்கு முன்பு
அந்தக் கைகளைப் பார்த்ததே இல்லை
என்பது போல


நான் பார்ப்பதை
ஒரு கணம் தவறவிட்டாலும்
அது என்னுடைய கைகளாக
இல்லாமல் போய்விடும்
என்பதுபோல


நான் பார்க்கும்போதே
அதன் ரேகைகள்
இடம்மாறுகிறதா என்று


நான் பார்க்காதபோது
அந்தக் கைகள்
என்னைப் பார்க்கிறதா என்று


நிராசையின் தினத்தில்
நமக்குப் பார்ப்பதற்கு
நமது கைகளைத் தவிர
வேறு எதுவுமே இல்லாமல் போய்விடுகிறது



மனுஷ்ய புத்திரனின் இந்தக் கவிதையைப் படித்த போது மறுமையின் நினைவுகளே மனதுக்குள் எழ ஆரம்பித்தன. பின்னர் வெறுங்கைகளோடு இப்படித்தான் நிற்க வேண்டி வருமோ என்ற அச்சம் மனதெங்கும் பரவத் தொடங்கிற்று...


 

No comments:

Post a Comment