Wednesday, March 9, 2011

மனமுறிவு


நீ மன்னித்துவிட விரும்பியிருக்கலாம்

நான் சரிசெய்ய முயன்றிருக்கலாம்

ஆனால் இவையெல்லாம் நிகழ்ந்தது

கருணையற்ற ஒரு கோடையில்

அவரவர் பொருளை

அவரவர் வைத்துக் கொள்ளலாம்

அவரவர் நினைவுகளை

அவரவர் பிரித்துக் கொள்ளலாம்

யாருடையதென பிளவுபடாத ஒன்றை

மனம் கசந்த உறுதியுடன்

கைவிட்டுச் செல்லலாம்

எல்லாம் எதற்காகவென்று

கடைசிவரை

உனக்கும் தெரியவில்லை

எனக்கும் தெரியவில்லை
                             
                                  நன்றி- அதீதத்தின் ருசி

No comments:

Post a Comment