Tuesday, March 21, 2023

தட்டு தெகே இஸ்கோலே – சுவர்களுக்கு வெளியில் ஒரு வகுப்பறை

 

                           

 

//இரவும் பகலும் என் நாடி நரம்புகளில் ஓடும் அதே வாழ்க்கையருவிதான்  உலகமெலாம் ஓடி தாள லயங்களுடன் களி நடனம் புரிகிறது. பூமியின் துணிக்கைகள் வழியாக எண்ணற்ற புல்வெளியில் ஆனந்தமாய் அரும்பி.. ஆரவாரமாக அலைபாயும் இலைகளாயும் பூக்களாயும் சட்டென்று வடிவம் கொள்வதும் அதே வாழ்க்கைதான்.// ரவீந்திரநாத் தாகூர்(மொழிபெயர்ப்பு- பீ.எம்.எம் இர்பான்)

தட்டு தெகே இஸ்கோலே තට්ටු දෙකේ ඉස්කෝලේ (இரண்டு மாடிப் பாடசாலை) சர்வதேசத்தின் கவனத்தை வென்ற மற்றொரு சிங்களத் திரைப்படம். பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்குமான திரை விருந்தாக இருக்கிறது இத் திரைப்படம்.

Tuesday, March 7, 2023

Bulletproof Children- நம் சமகாலத்தில் குறுக்கிடும் இருண்ட தேவதைக் கதை



காலத்துக்கு காலம் மாறுபடுகின்ற மனித அனுபவங்களை கலைப்படைப்புகளில் கொண்டு வருகின்ற போது கலைப் படைப்பின் மொழியிலும் மாற்றங்கள் தேவைப்படுகின்றது. ஒரு கதையை எப்போதும் ஒரே முறையில் சொல்வதைவிட வேறுபட்ட முறைகளில் அந்த கதையை முன் வைக்கின்ற போது அது தருகின்ற அனுபவம் முற்றிலும் வித்தியாசப்படுகிறது. சிங்கள சினிமாத்துறை புதிய இயக்குநர்களின் முயற்சியால் பல பரிசோதனை முயற்சிகளைக் கடந்து கொண்டிருக்கிறது.

Thursday, February 23, 2023

Gaadi(காடி) : ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான குரல்


 

Gaadi (காடி) திரைப்படம் முடிந்ததும் வேறு உலகம் ஒன்றில் நான் சஞ்சரித்துக் கொண்டிருந்தேன். என்னைச் சுற்றியுள்ள எல்லா சப்தங்களுக்கும் நடுவே உறைந்த மனநிலையோடு நான் பயணித்துக் கொண்டுருந்தேன்.ஒரு நல்ல கலைப்படைப்பு நிச்சயம் நம்மை பாதிக்கச் செய்கிறது.

Monday, December 5, 2022

எப்போதும் நான் புத்தகங்களின் காதலனாக இருக்கவே விரும்புகிறேன் - இன்ஸாப் ஸலாஹுதீன்

 


உங்களை பற்றிய ஒரு அறிமுகம்?

 நான் இலங்கையின் மத்திய மலை நாட்டில் படுபிடிய எனும் கிராமத்தில் பிறந்தேன். கூலித் தொழிலாளிகள் நிறைந்த ஒரு கிராமம் அது. தேயிலைத் தொழிலை அதிகமானோர் தம் வாழ்வாதாரத்திற்காக செய்து வந்தனர். உம்மா,வாப்பா இரண்டு சகோதரர்கள்,ஒரு குட்டித் தங்கை.திருமணம் முடித்து இரண்டு மகன்கள்  இருக்கிறார்கள். ஒரு குட்டிக் குடும்பம் தூக்கணாங்குருவிக் கூட போல.

Thursday, October 20, 2022

வாசிப்பு கௌரவமான செயல் என்பதை புதிய தலைமுறைக்குப் புரிய வைக்க வேண்டும் - பேராசிரியர். லியனகே அமரகீர்த்தி


பேராசிரியர் லியனகே அமரகீர்த்தி தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை குருநாகலில் உள்ள கிராமியப் பாடசாலை ஒன்றில் பெற்றுக் கொண்டார். 1990 ஆம் ஆண்டு கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த பின்னர்,  1998 ஆம் ஆண்டு தனது முதுகலைப் படிப்பிற்காக Wisconsin பல்கலைக்கழகம் சென்றார்.

Thursday, March 24, 2022

கசபத் – நுகர்வியத்திற்கு எதிரான குரல்



பாடல்கள் முடிந்து விடும்

ஆனால் வாழ்க்கை தொடர்ந்து வரும்…“

- நாகா நாட்டுப்புற பாடல் வரி

 

இந்த வாழ்க்கை ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சித்திரத்தைக் கொடுக்கிறது. அல்லது ஒவ்வொருவரும் வாழ்க்கைக்கு ஒவ்வொரு சித்திரத்தைக் கொடுக்கின்றனர். வாழ்க்கை பற்றிய புரிதலும் வாழ்வில் முதன்மைப்படுத்தல்களும் ஆளுக்காள் வேறுபடுகிறது.

Wednesday, October 14, 2020

எனது மதத்தை நான் கலையாகவே பார்க்கிறேன் - நாரணிப்புழா ஷாநவாஸ்

 

நாரணிப்புழா ஷாநவாஸ் சங்கரம்குளம் நாரணிப்புழா அவரது பூர்வீகம்சிறிய வயதிலிருந்தே சினிமா அவரை மிகவும் பாதித்த ஒன்றுதிரைப்படம்தான் அவர் வாழ்க்கை என்று கூறும் ஷாநவாஸ் பட்டம் பெற்ற பிறகு, சேதானா திரைப்பட நிறுவனத்தில் திரைப்படத்துறையில் பயின்றார்.

Wednesday, June 24, 2020

இசை இன,மத,மொழி பேதங்களைக் கடந்து மனிதர்களை இணைக்கிறது - கிஹான் பத்திரன



கிஹான் தனன்ஜய பத்திரன இரத்தினபுரி மாவட்டத்தில் பெல்மடுல்லயைச் சேர்ந்தவர்.பெல்மடுல்ல தர்மாலோக நவோத்யா வித்தியாலயத்தில் உயர்தரம் வரை கல்வி கற்றுவிட்டு கட்புல மற்றும் அரங்கேற்றற் கலைகளுக்கான பல்கலைக்கழகத்தில் இணைந்தார்.மனோரி உத்கலகே என்ற சங்கீத ஆசிரியை இவரை பல்கழைக்கழகம் வரை அனுப்புவதில் அதிக ஈடுபாடு காட்டியதாக கிஹான் நினைவு கூர்கிறார்.

Sunday, May 10, 2020

ஆனந்த குமாரசுவாமி – கீழ்த்திசைக் கலையை உலகறியச் செய்தவர்


கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் ஒரு நாள் எழுத்தாளர் சம்பத் பண்டார அவர்களது வீட்டில் உரையாடிக் கொண்டிருந்தேன். அது ஒரு நண்பகல் நேரம். அவரது வீட்டில் இருந்த சாம்பல் நிற பூனை அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தது.

Thursday, January 16, 2020

சுனாமி திரைப்படம் பற்றிய பதிவு



கலாநிதி சோமாரத்ன திஸாநாயக்க அவர்களை கடந்த வருடம் சந்தித்த போது சுனாமி திரைக்கதை அவருடைய மேசையில் ,ருந்தது.அப்போது அந்தப் படத்தை யக்கிக் கொண்டிருப்பதாக அவர் கூறினார்.அந்தப் பிரதி எப்படி திரைப்படமாக மாறப் போகிறது என்கிற கற்பனை எனக்குள் ஓடிக் கொண்டிருந்தது.