Wednesday, June 24, 2020

இசை இன,மத,மொழி பேதங்களைக் கடந்து மனிதர்களை இணைக்கிறது - கிஹான் பத்திரன



கிஹான் தனன்ஜய பத்திரன இரத்தினபுரி மாவட்டத்தில் பெல்மடுல்லயைச் சேர்ந்தவர்.பெல்மடுல்ல தர்மாலோக நவோத்யா வித்தியாலயத்தில் உயர்தரம் வரை கல்வி கற்றுவிட்டு கட்புல மற்றும் அரங்கேற்றற் கலைகளுக்கான பல்கலைக்கழகத்தில் இணைந்தார்.மனோரி உத்கலகே என்ற சங்கீத ஆசிரியை இவரை பல்கழைக்கழகம் வரை அனுப்புவதில் அதிக ஈடுபாடு காட்டியதாக கிஹான் நினைவு கூர்கிறார்.

Sunday, May 10, 2020

ஆனந்த குமாரசுவாமி – கீழ்த்திசைக் கலையை உலகறியச் செய்தவர்


கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் ஒரு நாள் எழுத்தாளர் சம்பத் பண்டார அவர்களது வீட்டில் உரையாடிக் கொண்டிருந்தேன். அது ஒரு நண்பகல் நேரம். அவரது வீட்டில் இருந்த சாம்பல் நிற பூனை அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தது.

Thursday, January 16, 2020

சுனாமி திரைப்படம் பற்றிய பதிவு



கலாநிதி சோமாரத்ன திஸாநாயக்க அவர்களை கடந்த வருடம் சந்தித்த போது சுனாமி திரைக்கதை அவருடைய மேசையில் ,ருந்தது.அப்போது அந்தப் படத்தை யக்கிக் கொண்டிருப்பதாக அவர் கூறினார்.அந்தப் பிரதி எப்படி திரைப்படமாக மாறப் போகிறது என்கிற கற்பனை எனக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

Wednesday, January 15, 2020

மனிதாபிமானத்தின் உயர்ந்த செய்தியை சிறுவர்கள் மூலம் கொண்டு செல்ல நான் விரும்பினேன் - இயக்குநர் சோமாரத்ன திஸாநாயக்க




சரோஜா திரைப்படம் மூலம் அறிமுகமான சோமாரத்ன திஸாநாயக்க இலங்கையின் சிங்களத் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர்.அவரது முதல் படமே பெரும் வெற்றியீட்டியது.இதனால் அவுஸ்திரேலியாவில் மருத்துவ கதிரியக்கவியல் நிபுணராக இருந்த அவர் சினிமாத்துறைக்கு தன்னை மாற்றிக் கொண்டு இன்றும் அத் துறையில் பயணிக்கிறார்.இவரது பெரும்பாலான படங்கள் சிறுவர்களை மையப்படுத்திய சமூக யதார்த்தப் படங்களே.

Wednesday, October 16, 2019

ஒரு கூர்வாளின் நிழலில் – கண்ணீரின் சாட்சியம்




தமிழினியின் “ஒரு கூர்வாளின் நிழலில்“ ஒரு போராளியின் வாழ்நாள் சாட்சியமாக நமக்கு முன் நிற்கிறது.சாதாரண பாடசாலைச் சிறுமியாய் இருந்து 20 வருட போராட்ட வாழ்வில் நுழைந்து, ஒரு கைதியாய் பிடிபட்டு நோயின் காரணமாக மரணித்துப் போகும் வரையான காலத்தை உயிரோட்டமாய் பதிவு செய்திருக்கிறார். தமிழினியின் வாழ்நாளில் தனக்கு முன்னால் தோன்றிய ஒரு போராட்டத்தில் வாழ்ந்து, தன் கண்களுக்கு முன்னாளே அது தோற்றுப் போவதையும் பார்த்து அவர் பேசும் வார்த்தைகள் நம்மை ஆழமாகச் சுடுகின்றன.

Thursday, July 18, 2019

மகாத்மா காந்தி: இலங்கை விஜயமும் இலங்கை அரசியலும்

பிரபல சிங்கள எழுத்தாளர் சம்பத் பண்டார அவர்களது 'மகாத்மா காந்தி: இலங்கை விஜயமும் இலங்கை அரசியலும்' என்ற நூல் காந்தியின் இலங்கை விஜயம் குறித்த பல்வேறு தரவுகளை முன்வைக்கின்றது.

காந்தியின் இலங்கை விஜயம் குறித்து இணையத்தில் வித்தியாசமான கருத்துக்கள் இருக்கின்றன.அதாவது சீ. கொரியா என்பரே காந்தியை இலங்கைக்கு அழைத்ததாகவும் அவர் மூன்று வாரங்கள் இலங்கையில் இருந்ததாகவும் சிலாபத்தில் தங்கியதாகவும் தகவல்கள் இணையத்தில் இருக்கின்றன.

Monday, March 25, 2019

‘Sulanga apa ragena yawi' சர்வதேசத்தின் கவனத்தை வென்ற இலங்கைத் திரைப்படம்



18 ஆவது லன்டன் ஆசிய திரைப்பட விழாவில் முதலாவது திரையிடப்பட்ட இலங்கைத் திரைப்படம் “sulanga apa ragena yawi'.இது தவிர சுமார் எட்டுக்கும் மேற்பட்ட  சர்தேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு சர்வதேசத்தின் கவனத்தைப் பெற்றுள்ளது. இத் திரைப்படம் ஸ்டீவன் ஸ்பில் பேர்க் தனது முதலாவது திரைப்படத்திற்காக வென்ற ரெமி விருதை ஹுஸ்டன் திரைப்பட விழாவில் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச மட்டத்தில் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, கவனத்தைப் பெற்றிருக்கும் இத் திரைப்படம் இப்போது இலங்கையில் திரையிடப்படுகிறது.

Friday, January 11, 2019

இனவாதம் தோற்றுப் போன ஒரு கோஷம் - இயக்குநர் அசோக ஹந்தகம



அசோக ஹந்தகம சர்வதேச அரங்கில் நன்கு அறியப்பட்ட இலங்கையின் முக்கிய திரைப்பட இயக்குநர். களனிப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தையும் இங்கிலாந்தின் Warwick பல்கலைக்கழகத்தில்  அபிவிருத்திப் பொருளியலில் முதுகலைமாணிப் பட்டத்தை பெற்றுக் கொண்ட இவர் பல்வேறு கலைப்படைப்புக்களை வெளிக் கொண்டு வந்திருக்கிறார்.இவரது திரைப்படங்கள் தேசிய ரீதியிலும் சர்வதேச மட்டத்திலும் பல விருதுகளை வென்றிருக்கின்றன.தொலைக்காட்சி நாடகம் மேடை நாடகம்,சினிமா என பல தளங்களில் இவர் தொடர்ந்தும் இயங்கி வருகிறார்.அதே நேரம் இலங்கை மத்திய வங்கியின் உதவி ஆளுநராகப் பணியாற்றுகிறார்.
சந்திப்பு – இன்ஸாப் ஸலாஹுதீன்

Friday, January 4, 2019

பெண்களது பங்களிப்பைப் பெற்றுக் கொள்ளாமல் இருக்கிறோம் என்றால் சமூகத்தில் 51 வீதமான வளத்தை பயன்படுத்தாமல் வைத்திருக்கிறோம் - முஹம்மத் ரியாஸ்

முஹம்மத் ரியாஸ் - மனிதாபிமான உதவிகளுக்கான முகாமையாளர்- ஒக்ஸ்பாம்

முஹம்மத் ரியாஸ் உடுநுவரை தஸ்கரையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.ஹன்தெஸ்ஸ அல்மனார் தேசிய பாடசாலையில் கல்வியைப் பெற்றுக் கொண்ட இவர் அரச சார்பற்ற நிறுவனங்களில் பணிபுரிய ஆர்வம் கொண்டு இத்துறையைத் தேர்நதெடுத்தார். போதை எதிர்ப்பு, முரண்பாட்டு முகாமைத்துவம், மனிதாபிமான உதவி என பல தளங்களில் பணியாற்றியுள்ளார். school for international training Boston அமெரிக்க பல்கலைக்கழகத்தில் அனர்த்தம் தொடர்பாகவும் அவுஸ்த்திரேலியா Deakin பல்கலைக்கழகத்தில் மனிதாபிமானத் தலைமைத்தும் தொடர்பாகவும்  கலைமாணிப் பட்டங்களைப் பெற்றுள்ளார்.ஒக்ஸ்பாம்,கெயார், இண்டர்நஷனல் அலார்ட் போன்ற சர்வதேச நிறுவனங்களுடன் நீண்ட காலம் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.25 நாடுகளுக்கும் மேல் பயணித்துள்ள இவர் தற்போது ஒக்ஸ்பாம் நிறுவனத்தின் சர்வதேச அலகில் பணியாற்றுகிறார். பங்களாதேசில் 10 இலட்சம் மியன்மார் அகதிகள் தங்கியிருக்கும் முகாமில் மனிதாபிமான உதவிகளுக்கான பொறுப்பாளராக பணியாற்றுகின்ற போது அவருடன் மேற்கொண்ட நேர்காணல் இது.

Thursday, January 3, 2019

சமூகங்களுக்கிடையிலான இடைவெளிகளை நிரப்ப கலைஞர்கள் முன்வர வேண்டும். - நிலார் என்.காஸிம்





நிலார் என்.காஸிம் என்ற பெயர் இந்த நாட்டின் கலை இலக்கியத் துறையில் தவிர்க்க முடியாத ஒரு பெயர்.இத் துறையில் கடந்த 25 வருடங்களாக சிங்கள உலகில் கம்பீரமாக அவர் இயங்கிக் கொண்டிருக்கிறார். நிலார் என் காசிம் மாத்தறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சிறிஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் சிங்கள மொழியிலும் இலக்கியத்திலும் சிறப்பு கலைமாணிப் பட்டத்தையும் களனிப் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் பட்டத்தையும் நிறைவுசெய்துள்ள முதல் முஸ்லிமாக இவர்  இருக்கிறார்.
சுமார் 600 இற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி இலங்கையின் சிங்களப் பாடல்களின் போக்கில் ஒரு திருப்புமுனையாக அமைந்தவர்.தமிழ் இலக்கியத்தை சிங்கள மொழிக்கு கொண்டு செல்வதில் காத்திரமான பங்களிப்பையும் வழங்கியுள்ளார். இரண்டு மொழிகள் ஊடாக மூன்று சமூகங்களை இணைக்கின்ற ஒரு பாலமாக இவர் இருக்கிறார்.
தற்போது இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபணத்தில் விளம்பரம் மற்றும் ஊடகப் பிரிவின் உதவிப் பணிப்பாளராக கடமையாற்றுகிறார்.
அவருடைய 25 வருட கலை வாழ்க்கைக்கு வாழ்த்துக் கூறி இந்த நேர்காணலை மேற்கொள்கிறேன்.