கடிதம் எழுதும்
பழக்கம் இன்று முற்றாகக் குறைந்து போய் விட்டது. எல்லோரினதும் கடந்த காலம் என்பது எண்ணற்ற
கடிதங்களால் நிரம்பியிருக்கின்றது. பாடசாலைக் காலத்தில் தமிழ்ப் பாடத்தில் கடிதம் எழுதும்
வழக்கம் இருக்கின்றது.எமது பிறந்த நாளைக்கு அழைத்தோ, வாழ்த்தியோ தொலை தூர நண்பர் ஒருவரை
கற்பனை செய்து கொண்டு கடிதம் எழுதுவோம்.அதுவரையில் நிஜமாக யாருக்கும் கடிதம் எழுதிப்
பார்த்ததில்லை.இன்றைக்கு ஒரு குழந்தை பாடசாலையில் எழுதும் கடிதமே அது எழுதும் முதலும்
முடிவுமான உறவுமுறைக் கடிதமாக மாறிவிட்டது.
Saturday, November 29, 2014
Monday, November 3, 2014
நோபல் விருதின் அரசியல்! – கெளதம சித்தார்த்தன்
உலகளவில் கவனத்தைக் கவரும் நோபல் விருதுகள் குறித்து காலங்காலமாக
விமர்சனங்களும் சர்ச்சைகளும் எழுந்து கொண்டேயிருப்பது வாடிக்கைதான் என்று,
அந்த விமர்சனக் கருத்துக்களை மலினப்படுத்துவதும், அலட்சியப்படுத் துவதுமான
போக்கைத் தொடர்ச்சியாக, சர்வதேச வெளியில் உருவாக்கிக் கொண்டே
வந்திருக்கிறது நோபல் விருதுக்குழு. அப்படியான விமர்சனங்களை யும்,
செயல்பாடுகளையும் மாற்றுப்பார்வை கொண்ட சிந்தனையாளர்களும், முற்போக்கு
எண்ணங்கள் கொண்ட எளிய மனிதர்களும் முன்வைக்கும்போது, அதைப் பகடி செய்து
அலட்சியப்படுத்தும் உளவியலை சர்வதேச அளவில் வெற்றிகரமாக உருவாக்கி
வைத்திருப்பதுதான் நோபல் அமைப்பின் மகதத்தான சாதனை.
Tuesday, October 14, 2014
அழகிய வார்த்தை
‘உன் வாழ்க்கையை மாற்றுவதற்கு உன் வார்த்தைகளுக்கு சக்தியிருக்கிறது.’
ஒரு நாளில் நாம் எத்தனை வார்த்ததைகளைப் பயன்படுத்துகின்றோம்?
காலை முதல் இரவு தூங்கச் செல்லும் வரை நாம் அறிந்தும் அறியாமலும் பல நூறு
வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றோம்.நாம் பயன்படுத்திய வார்த் தைகளை யாரும் ஒரு
தடவையேனும் மீட்டிப் பார்ப்பதில்லை. காற்றுடன் எல்லாம் கரைந்துவிடுகின்றன.
Monday, September 1, 2014
Wednesday, August 27, 2014
நான் பிரகடனம் செய்கிறேன்
எனது நாட்டில் ஒருசாண் நிலம்
எஞ்சி இருக்கும் வரை
என்னிடம் ஒரு ஒலிவ்மரம்
எஞ்சி இருக்கும் வரை
ஒரு எலுமிச்சை மரம்
ஒரு கிணறு
ஒரு சப்பாத்திக் கள்ளி
எஞ்சி இருக்கும் வரை
ஒரு சிறு நினைவு
ஒரு சிறு நூலகம்
ஒரு பாட்டனின் புகைப்படம்
ஒரு சுவர்
எஞ்சி இருக்கும் வரை
அரபுச் சொற்கள் உச்சரிக்கப்படும் வரை
நாட்டுப் பாடல்கள் பாடப்படும் வரை
கவிஞர்கள்
அந்தர் அல்-அப்ஸ் கதைகள்
பாரசீகத்துக்கும் ரோமுக்கும் எதிரான
யுத்த காவியங்கள்
எனது நாட்டில் இருக்கும் வரை
எனது கண்கள் இருக்கும் வரை
எனது உதடுகள் எனது கைகள்
எனது தண்ணுணர்வு இருக்கும் வரை
விடுதலைக்கான பயங்கரப் போரை
எதிரியின் எதிரில் நான் பிரகடனம் செய்வேன்.
- மஹ்மூத் தர்வீஷ்
Tuesday, August 12, 2014
அன்புள்ள மக்மல்பஃப், எங்கள் நாட்டிலும் ஈரானிய சினிமா இருக்கிறது.... கௌதம சித்தார்த்தன்
“இந்தியாவில் கதைக்கா பஞ்சம்? சாலையில்தான் எத்தனை கதைகள்? நான், சாலையிலிருந்த ஒரு கடையில் ஒரு பழச்சாறு வாங்கிக் கொண்டிருந்தபோது, ஒரு சிறுவன் கையேந்தினான். அவனிடம் பழச்சாறைக் கொடுத்து விட்டு, அவன் என்ன செய்கிறான் என்று கவனித்தேன். அவன் சாலையைக் கடந்துபோய், எதிரிலிருந்த திண்டில் ஒரு செய்தித்தாளை விரித்துப் போட்டு, கால் மேல் கால் போட்டு ஒரு ராஜாவைப்போல உட்கார்ந்து கொண்டு, புறக் காட்சிகளை ஏளனமாகப் பார்த்துக் கொண்டே அந்தப் பழச்சாறைப் பருகினான்.
Thursday, August 7, 2014
Monday, May 26, 2014
மழையில் நனையும் மலை
‘வாழ்க்கை என்பது
ஒரு மலையேற்றம்.மலை ஏற ஏற ஒவ்வொன்றும் சிறியதாகி அற்பமாகி பார்வையை விட்டு மறைந்தபடியே
உள்ளன.ஏறி ஏறி உச்சியில் கால்வைத்ததும் மலையே அற்பமாகி மறைந்து விடுகிறது.ஏறும் போதெல்லாம்
நான் நான் என்று நாம் உணர்ந்த சுயமும் அற்பமாகிவிடுகிறது. எல்லாவற்றையும் அற்பமாக்கிவிடும்
வானம் மட்டுமே எஞ்சுகிறது.’ ஜெயமோகன்
ஒரு மழை நாளில்
கடுகண்ணாவை மேட்டுப் பாதையில் பேரூந்து பயணித்துக் கொண்டிருந்தது.என் ஜன்னலுக்கு வெளியே
தூரத்தில் தெரியும் மலையை உற்றுப் பார்க்கிறேன்.மழையில் அது நனைந்து கொண்டிருக்கிறது.
உலகம் பூராகவும் உள்ள மலைகள் மழையில் நனைவதும் வெயிலில் காய்வதும் என் நினைவுகளைத்
தட்ட ஆரம்பிக்கின்றன.
Tuesday, May 13, 2014
Thursday, April 3, 2014
மோடியை இனப்படுகொலையின் அடையாளமாகவே சிறுபான்மையினர் பார்க்கின்றனர் - அ.முத்துக்கிருஷ்ணன்
வாசிப்பு,
பயணம், எழுத்து
என கடந்த
இருபது ஆண்டுகளாக
தமிழ் சூழலில்
சுற்றி வருபவர்
அ.முத்துக்கிருஷ்ணன்.
மதுரையைச் சேர்ந்த
இவர் விளிம்புநிலை
மக்கள், சிறுபான்மையினர்,
சுற்றுப்புறச்சுழல், உலகமயம்,
மனித உரிமைகள்
என பல
தலைப்புகளில் தொடர்ந்து
எழுதி வருகிறார்.
உயிர்மை, தமிழினி,
ஆனந்த விகடன்,
ஜீனியர் விகடன்,
இந்தியாடு டே,
தலித் முரசு,
புதிய பார்வை,
புது எழுத்து
என தமிழில்
வெளிவரும் பல
பத்திரிக்கைகளில் இவரது
பதிவுகளை நீங்கள்
கானலாம்.மதுரை
நகரின் வரலாற்று-தொல்லியல்
சிறப்புகளை பற்றி
மக்களிடையே ஒரு
பெரும் விழிப்புணர்வை
ஏற்படுத்தி வரும்
பசுமை நடையை
நிறுவியவர் அ.முத்துக்கிருஷ்ணன்.
Subscribe to:
Posts (Atom)











