Wednesday, August 27, 2014

நான் பிரகடனம் செய்கிறேன்













எனது நாட்டில் ஒருசாண் நிலம்
எஞ்சி இருக்கும் வரை
என்னிடம் ஒரு ஒலிவ்மரம்
எஞ்சி இருக்கும் வரை
ஒரு எலுமிச்சை மரம்
ஒரு கிணறு
ஒரு சப்பாத்திக் கள்ளி
எஞ்சி இருக்கும் வரை

ஒரு சிறு நினைவு
ஒரு சிறு நூலகம்
ஒரு பாட்டனின் புகைப்படம்
ஒரு சுவர்
எஞ்சி இருக்கும் வரை

அரபுச் சொற்கள் உச்சரிக்கப்படும் வரை
நாட்டுப் பாடல்கள் பாடப்படும் வரை
கவிஞர்கள்
அந்தர் அல்-அப்ஸ் கதைகள்
பாரசீகத்துக்கும் ரோமுக்கும் எதிரான
யுத்த காவியங்கள்
எனது நாட்டில் இருக்கும் வரை














 எனது கண்கள் இருக்கும் வரை
எனது உதடுகள் எனது கைகள்
எனது தண்ணுணர்வு இருக்கும் வரை
விடுதலைக்கான பயங்கரப் போரை
எதிரியின் எதிரில் நான் பிரகடனம் செய்வேன்.

சுதந்திரமான மனிதர்கள் பெயரால்
தொழிலாளர்கள் மாணவர்கள் கவிஞர்கள் பெயரால்
நான் பிரகடனம் செய்வேன்

கோழைகள் சூரியனின் எதிரிகள்
அவமான ரொட்டியினால் ஊதிப் புடைக்கட்டும்
நான் வாழும் வரை எனது சொற்களும் வாழும்
சுதந்திரப் போராளிகளின் கைகளில்
ரொட்டியாயும் ஆயுதமாயும்
என்றும் இருக்கும்.

- மஹ்மூத் தர்வீஷ்



Tuesday, August 12, 2014

அன்புள்ள மக்மல்பஃப், எங்கள் நாட்டிலும் ஈரானிய சினிமா இருக்கிறது.... கௌதம சித்தார்த்தன்


இந்தியாவில் கதைக்கா பஞ்சம்? சாலையில்தான் எத்தனை கதைகள்? நான், சாலையிலிருந்த ஒரு கடையில் ஒரு பழச்சாறு வாங்கிக் கொண்டிருந்தபோது, ஒரு சிறுவன் கையேந்தினான். அவனிடம் பழச்சாறைக் கொடுத்து விட்டு, அவன் என்ன செய்கிறான் என்று கவனித்தேன். அவன் சாலையைக் கடந்துபோய், எதிரிலிருந்த திண்டில் ஒரு செய்தித்தாளை விரித்துப் போட்டு, கால் மேல் கால் போட்டு ஒரு ராஜாவைப்போல உட்கார்ந்து கொண்டு, புறக் காட்சிகளை ஏளனமாகப் பார்த்துக் கொண்டே அந்தப் பழச்சாறைப் பருகினான்.

Thursday, August 7, 2014

முஸ்லிம் பெண்களின் ஆடை- கறுப்பிலிருந்து கலரை நோக்கி… உரையாடலுக்கான ஒரு குறிப்பு



முஸ்லிம் பெண்களின் ஆடை குறித்த பற்றிய சர்ச்சைகள் உலக அளவில் இருந்து வருகின்றன.உலகில் வாழும் பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்களும் பல்வகை ஆடைகளைகளை அணிகின்றனர்.சிலர் தமது மதம்,கலாசாரம் சார்ந்து அதை அமைத்துக் கொள்கின்றனர்.இன்னும் சிலர் பிற கலாசாரங்களைப் பின்பற்றி அதைத் தெரிவு செய்து கொள்கின்றனர்.

Monday, May 26, 2014

மழையில் நனையும் மலை




‘வாழ்க்கை என்பது ஒரு மலையேற்றம்.மலை ஏற ஏற ஒவ்வொன்றும் சிறியதாகி அற்பமாகி பார்வையை விட்டு மறைந்தபடியே உள்ளன.ஏறி ஏறி உச்சியில் கால்வைத்ததும் மலையே அற்பமாகி மறைந்து விடுகிறது.ஏறும் போதெல்லாம் நான் நான் என்று நாம் உணர்ந்த சுயமும் அற்பமாகிவிடுகிறது. எல்லாவற்றையும் அற்பமாக்கிவிடும் வானம் மட்டுமே எஞ்சுகிறது.’ ஜெயமோகன்

ஒரு மழை நாளில் கடுகண்ணாவை மேட்டுப் பாதையில் பேரூந்து பயணித்துக் கொண்டிருந்தது.என் ஜன்னலுக்கு வெளியே தூரத்தில் தெரியும் மலையை உற்றுப் பார்க்கிறேன்.மழையில் அது நனைந்து கொண்டிருக்கிறது. உலகம் பூராகவும் உள்ள மலைகள் மழையில் நனைவதும் வெயிலில் காய்வதும் என் நினைவுகளைத் தட்ட ஆரம்பிக்கின்றன.

Tuesday, May 13, 2014

காற்றில் கையசைத்து…


என் பதினாறாவது வயதில்தான் நான் முதன்முதல் ரயிலில் பயணம் செய்திருக்கிறேன்.தண்டவாளமும் ரயிலும் ஒரு கனவென என் கற்பனையில் சுழன்று கொண்டிருந்தாலும் பால்யத்தின் பிந்திய வயதில்தான் அது கைகூடியிருக்கிறது.

Thursday, April 3, 2014

மோடியை இனப்படுகொலையின் அடையாளமாகவே சிறுபான்மையினர் பார்க்கின்றனர் - அ.முத்துக்கிருஷ்ணன்

  
வாசிப்பு, பயணம், எழுத்து என கடந்த இருபது ஆண்டுகளாக தமிழ் சூழலில் சுற்றி வருபவர் .முத்துக்கிருஷ்ணன். மதுரையைச் சேர்ந்த இவர் விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர், சுற்றுப்புறச்சுழல், உலகமயம், மனித உரிமைகள் என பல தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். உயிர்மை, தமிழினி, ஆனந்த விகடன், ஜீனியர் விகடன், இந்தியாடு டே, தலித் முரசு, புதிய பார்வை, புது எழுத்து என தமிழில் வெளிவரும் பல பத்திரிக்கைகளில் இவரது பதிவுகளை நீங்கள் கானலாம்.மதுரை நகரின் வரலாற்று-தொல்லியல் சிறப்புகளை பற்றி மக்களிடையே ஒரு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் பசுமை நடையை நிறுவியவர் .முத்துக்கிருஷ்ணன்.

Monday, March 24, 2014

முஸ்லிம்களைப் புரிந்து கொள்ளும் வகையிலான வெளியீடுகள் சிங்களத்தில் அதிகம் வர வேண்டும் கலாநிதி லியனகே அமரகீர்த்தி



கலாநிதி லியனகே அமரகீர்த்தி குருநாகலை,குளியாப்பிட்டியைச் சேர்ந்தவர். தனது  கிராமத்தில் ஆரம்பக் கல்வியைப் பெற்றுக் கொண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் நுழைந்த இவர் 2000 ஆம் ஆண்டு தனது முதுகலைமாணிப் பட்டத்தை இலக்கியத்துறையில் விஸ்கொன்ஸின் பல்கலைக் கழகத்தில் பெற்று அதே பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதிப் பட்டததையும் பெற்றுக் கொண்டார்.ஒரு சிறந்த எழுத்தாளரான இவர் இதுவரை புனைகதை, கவிதை,இக்கியக் கோட்பாடு குறித்து 15 இற்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.

Thursday, March 13, 2014

புன்னகை தர்மம்


வாழ்க்கையில் நல்லது செய்ய வேண்டும் என எல்லா மனிதனும் ஏதோ ஒரு கட்டத்தில் நினைப்பதுண்டு.எதைச் செய்வது? எதைச் செய்யாமல் விடுவது என்ற தேர்வில் மனிதனுக்கு எப்போதும் ஒரு குழப்ப நிலை இருக்கின்றது. நன்மைகளைச் செய்ய தர்மம் செய்ய வேண்டும், பள்ளிவாயலுக்குப் போக வேண்டும் அல்லது மக்காவுக்குப் போக வேண்டும் என பலரும் நினைப்பதுண்டு.அதில் தவறில்லை.

Monday, March 10, 2014

விடைபெறும் தருணங்களில்...



‘பிரிவில்
சந்திப்பின் ஏக்கம்
சந்திப்பில்
பிரிவின் அச்சம்
மனமே! உனக்கு
இரண்டிலும்
நிம்மதி இல்லை’

                     -கவிக்கோ-

Thursday, January 16, 2014

சிறுவர்களுக்கான நூல்கள்: ஏன் ஒரு தனியான பதிப்பகம் இல்லை?



                                      
பதிப்பகங்களின் வளர்ச்சி கடந்த காலத்தை விட இப்போது பல மடங்கு அதிகரித்துள்ளது.இணையத்தின் வருகை பதிப்பகங்களை மூடிவிடும் என்ற பலமான அச்சம் நிலவினாலும் பதிப்புலகின் வாயில்கள் இன்னும் அகலத் திறந்தே இருக்கின்றன.ஒவ்வொரு வருடமும் கோடிகணக்கான புத்தகங்கள் உலகில் விற்றுத் தீர்கின்றன.