Monday, March 24, 2014

முஸ்லிம்களைப் புரிந்து கொள்ளும் வகையிலான வெளியீடுகள் சிங்களத்தில் அதிகம் வர வேண்டும் கலாநிதி லியனகே அமரகீர்த்தி



கலாநிதி லியனகே அமரகீர்த்தி குருநாகலை,குளியாப்பிட்டியைச் சேர்ந்தவர். தனது  கிராமத்தில் ஆரம்பக் கல்வியைப் பெற்றுக் கொண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் நுழைந்த இவர் 2000 ஆம் ஆண்டு தனது முதுகலைமாணிப் பட்டத்தை இலக்கியத்துறையில் விஸ்கொன்ஸின் பல்கலைக் கழகத்தில் பெற்று அதே பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதிப் பட்டததையும் பெற்றுக் கொண்டார்.ஒரு சிறந்த எழுத்தாளரான இவர் இதுவரை புனைகதை, கவிதை,இக்கியக் கோட்பாடு குறித்து 15 இற்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.

Thursday, March 13, 2014

புன்னகை தர்மம்


வாழ்க்கையில் நல்லது செய்ய வேண்டும் என எல்லா மனிதனும் ஏதோ ஒரு கட்டத்தில் நினைப்பதுண்டு.எதைச் செய்வது? எதைச் செய்யாமல் விடுவது என்ற தேர்வில் மனிதனுக்கு எப்போதும் ஒரு குழப்ப நிலை இருக்கின்றது. நன்மைகளைச் செய்ய தர்மம் செய்ய வேண்டும், பள்ளிவாயலுக்குப் போக வேண்டும் அல்லது மக்காவுக்குப் போக வேண்டும் என பலரும் நினைப்பதுண்டு.அதில் தவறில்லை.

Monday, March 10, 2014

விடைபெறும் தருணங்களில்...



‘பிரிவில்
சந்திப்பின் ஏக்கம்
சந்திப்பில்
பிரிவின் அச்சம்
மனமே! உனக்கு
இரண்டிலும்
நிம்மதி இல்லை’

                     -கவிக்கோ-

Thursday, January 16, 2014

சிறுவர்களுக்கான நூல்கள்: ஏன் ஒரு தனியான பதிப்பகம் இல்லை?



                                      
பதிப்பகங்களின் வளர்ச்சி கடந்த காலத்தை விட இப்போது பல மடங்கு அதிகரித்துள்ளது.இணையத்தின் வருகை பதிப்பகங்களை மூடிவிடும் என்ற பலமான அச்சம் நிலவினாலும் பதிப்புலகின் வாயில்கள் இன்னும் அகலத் திறந்தே இருக்கின்றன.ஒவ்வொரு வருடமும் கோடிகணக்கான புத்தகங்கள் உலகில் விற்றுத் தீர்கின்றன.

Tuesday, December 24, 2013

இங்கிருந்து...மலையகத்தின் வாழ்வியல் பதிவுகள்

 
இலங்கையில் தமிழ்த் திரைப்படங்கள் தயாரிக்கும் முயற்சிகள் 1950 களுக்கு முன்னரே இருந்திருக்கின்றன.அரை நூற்றாண்டுகளைக் கடந்த நிலையில் இலங்கைத் தமிழ் சினிமா வரலாற்றுப் பாதையில் நவீன பரிமாணமாக “இங்கிருந்து“ நம்முன் நிற்கிறது.பேராதனைப் பல்கலைக்கழக ஆங்கிலத்துறைத் தலைவர், கலாநிதி சுமதி சிவமோகன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

Monday, December 9, 2013

சமூக அமைப்பில் மாற்றங்கள் சாத்தியம் ஆகும் போது திரைப்படத்திலும் சாத்தியம் ஆகும்




ராம்  இந்தியாவைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர். சென்னை கிறித்துவ கல்லூரியில் தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றவர். இயக்குனர் தங்கர் பச்சான் அவர்களின் சில படங்களில் உதவி இயக்குனராக பணி செய்துள்ளார். 2007 ஆம் ஆண்டு இவரின் முதல் படைப்பான கற்றது தமிழ் வெளியானது.அண்மையில் இவரது இயக்கத்தில் வெளியான அப்பா மகள் உறவைச் சித்தரிக்கும் “தங்கமீன்கள்“ தமிழில் முக்கிய ஒரு படமாகப் பார்க்கப்படுகிறது. இந்த நேர்காணலை வழங்க ராம் விருப்பம் தெரிவித்தார்.தனது இக்கட்டான பணிச் சூழலில் உரிய நேரத்தில் இதனைச் செய்து தர முடியவில்லை என்று வருந்தினார்.ஒரு உண்மையான படைப்பாளியின் எளிய குணமும் பிரியமும் அவனது படைப்பையே சிறந்ததாக மாற்றுகிறது.ராமுடன் தொடர்பு கொள்ள உதவி செய்த நண்பர் பஷீர்,கேள்விகளை திருத்தி செம்மைப்படுத்திய நண்பர் அமீர் அப்பாஸ் இருவருக்கும்  நன்றிகள்.

Monday, December 2, 2013

குனசிறி மஹத்தயா- நெஞ்சைத் தட்டும் நினைவு





“ஒரு எறும்புக்குக் கூட நான் அநியாயம் செய்ய நினைப்பதில்லை. என்னை ஏன் நரகத்தில் போட வேண்டும்“ குனசிறி அவர்களை நினைக்கும் போது அவர் சொன்ன இந்த வார்த்தைகள்தான் எனக்கு நினைவில் வருகிறது.அவசரமாய் நிகழாது என்று நினைத்த ஒரு மரணம் குறித்த செய்தி என் செல்போன் திரையில் தோன்றியது.
எல்லா மரணச் செய்திகளும் வாழ்க்கையின் நிச்சயமின்மையை திரும்பத் திரும்ப நினைவுபடுத்துகின்றன.

Friday, November 22, 2013

'யாதும்' இந்திய தமிழ் முஸ்லிம் உறவின் வரலாற்றுத் தொன்மை பற்றிய ஆவணப்படம்



ஒரு சமூகத்தின் வராற்றுத் தொன்மை என்பது அது வாழும் எல்லாக் காலத்திலும் தேவைப்படும் ஒன்றாகும்.ஒவ்வொரு சமூகமும் தம் வரலாற்று வேர்ககள் குறித்த விசாரனையை மேற்கொள்ள வேண்டும்.ஏனனில் வரலாறு இல்லாத சமூகம் தனது தனித்துவத்தையே இழந்துவிடும்.

அந்தவகையில் தனது வரலாற்றின் வேர்களை நோக்கிய பயணத்தின் நீண்ட தூரத்தைக் கடந்து அதனை ஆவணப்படமாக இயக்கியுள்ளார் இந்தியாவைச் சேர்ந்த எஸ்.அன்வர்.யாதும் என்ற பெயரில் வெளியாகியிருக்கும் இந்த ஆவணம் இந்திய முஸ்லிம்களது வரலாற்றுத் தொன்மையை தேடிப் பயணிக்கிறது. இந்தியாவின் தமிழ் முஸ்லிம் உறவென்பது நூற்றாண்டு களைக் கடந்தது என்று அது நிரூபிக்கிறது.

Wednesday, November 20, 2013

வாசிக்கக் கற்றுக் கொள்.உலகத்தையே பெற்றுக் கொள்வாய்

'கடந்த ஐம்பது ஆண்டுகளில் மக்கள் தொகையும் கல்வியும் எத்தனையோ மடங்கு விரிவடைந்துவிட்டன.ஆனால் ஒரு நூலின் அச்சிடப்படும் பிரதிகளின் எண்ணிக்கை மாறுதலடையவே இல்லை.இன்று வாசிப்பை பல்வேறு நிலைகளில் ஒரு இயக்கமாக மாற்ற வேண்டிய தேவை தீவிரமடைந்திருக்கிறது'
தோன்ற மறுத்த தெய்வம்-

புத்தகங்களும் வாசிப்பும் இந்த உலகின் அறிவுப் பயணத்தில் மிக முக்கிய சாதனங்கள்.வாசிப்பின்றி மனிதன் பூரணமாவதில்லை.இதனைத்தான் வாசிப்பு மனிதனை முழு மனிதனாக்கும் என்று மரபு வழியாகச் சொல்லி வருகிறோம்.

Saturday, November 9, 2013

தோன்ற மறுத்த தெய்வம்- காலத்தின் மீதான பதிவு


ஒரு நிகழ்ச்சிக்காக எனது விரிவுரையாளர் ஒருவரை அழைத்துக் கொண்டு செல்லும் நேரத்தில்தோன்ற மறுத்த தெய்வம்புத்தகத்தை அவரிடம் கொடுத்தேன்.மனுஷ்யபுத்திரன் எனும் எழுத்தாளர் அவருக்குப் பரிச்சயம் இல்லை.ஒரு சிறிய அறிமுகம் நான் சொல்ல வேண்டியிருந்தது. மூன்று மணித்தியாலப் பயணத்தில் பெரும் பகுதியில் அவர் நூலை வாசித்துக் கொண்டு வந்தார்.மொழியின் வீச்சும் வேகமும் அபாரம் என்றார்.